அண்டத் தைலம் ( சித்தர் விஞ்ஞானம் )

இப்போது மிகமிக முக்கியமான ஒரு மருந்து செய்முறையைப் பற்றி இப்போது சொல்லப் போகிறோம்.அதுதான் அண்டத் தைலம்.

உலகில் நாம் நம் தேவைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு ஐம்பொறிகளை இறைவன் கொடுத்துள்ளான்.அவை கண் , காது ,மூக்கு , வாய் , மெய்யாகிய உடல் . இவற்றில் தலையாயது கண் என்ற பொறியும் அதில் உள்ள பார்வை என்ற புலனும்.இந்தப் புலன் பிறவியில் இல்லாது போனால் அதை சமாளிக்கும் வல்லமையை இறைவன் கொடுத்துவிடுவான் .

ஆனால் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் பொறியான கண் சரியாது இயங்காது போனாலோ !!!! முற்றும் இயங்காது  போனால் என்னென்ன துன்பங்கள் நேரும் . அதை சமாளிக்க முடியாமல் என்னென்ன துன்பங்களை  அனுபவிக்கிறோம். கண்ணாடி போடுகிறோம்.காண்டாக்ட் லென்ஸ் அணிகிறோம் . கத்தியைக் கூட வைக்கிறோம். லேசரால் சுடுகிறோம் . இவை எல்லாம் உயிரைக் குறைக்கும் வழிகள் .

இப்படி எதுவும் இல்லாமல் ஒரு சொட்டு மருந்தை இரவு தினம் விட்டு வந்தால் இறக்கும் வரை கண் நன்றாகத் தெரிய ஒரு தைலம் இருக்கிறது .அந்த அண்டத் தைலம் தயாரிக்கும் விதத்தை இங்கே விவரிக்க இருக்கிறேன்.

முதலில் நாட்டுக் கோழி முட்டைகளை எடுத்து நன்றாக அவித்து  நெட்டு வாக்கில் பாதியாக வெட்டி  எடுத்துக் கொள்ளவும்.அதில் மஞ்சள் கருவை எடுத்துவிட்டு , மஞ்சள் கரு இருந்த வெள்ளைக் கரு  குழியை நன்றாக துடைத்துவிடவும்.பின் பச்சரிசியை ஒரு தட்டில் பரப்பி அதன் மேல் அந்த சரிபாதியாகியாக்கிய முட்டை வெள்ளைக்கருவை வைத்து ஒரு மின்சார அடுப்பிலோ அல்லது ஒரு சிறிய கரி அடுப்பிலோ வைக்க வேண்டும் . படத்தில் காட்டியபடி முட்டை வெள்ளைக் கருக் குழிகளில் தேன் விட்டு சிறிது நேரத்தில் தேன் தண்ணீர் போன்று மாறுகிறதா என்று கண்ணாடி பீய்ச்சாங்குழலால் சோதித்து ஒரு சொட்டு மருந்து புட்டியில் விட்டு பத்திரப் படுத்தவும்.இதுவே அண்டத் தைலம் ( அண்டம் என்றால் முட்டை என்று பொருள் ) .

இந்த அண்டத் தைலத்தை தினமும் ஒரு சொட்டு வீதம் கண்ணுக்கு விட்டு வர 96 வகையான கண் குற்றங்களும் போகும் .இது கண்ணில் விட்டவுடன் சிறிது எரிச்சலை உண்டாக்கும் . சிறிது கண்ணீர் வரும் .அதன் பின்னர் ஓரிரு நிமிடங்களில் எரிச்சல் நின்றுவிடும்.இப்படியே விட்டு வர 15 முதல் 48 நாட்களுக்குள் கண்ணில் உள்ள கோளாறுகள் நீங்கி கண் புத்தொளி பெறும்.வெறும் தேனே மிக நல்ல கண் மருந்து , அதில் முட்டையின் சத்தை ஏற்றும் போது மிகச் சிறப்பாக வேலை செய்யும் .

[tube]http://www.youtube.com/watch?v=z8RseOJ1ykA[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=W48It7NXh2c[/tube]

இந்தத் தைலம் கண்ணுக்கு சத்தேற்றும் ( TONIFICATION , ENERGISE ) . கண்குற்றங்களைப் போக்கும் அடுத்து ஒரு மூலிகையுடன் ( அத்தாற் பொறுத்தி )வேறோர் பதிவில் பார்ப்போம் .

வேறொரு முக்கிய சித்தர்கள் விடயத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறோம்.