மச்ச முனிவரின் சித்த ஞான சபை புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ்

அன்பார்ந்த மெய்யன்பர்களே,

உலகம் உய்ய நம் சித்தர் பெருமக்கள் வழி வழியாய் வந்த சில மெய்க் குருமார்களின் மூலமாக உண்மையான ஞானப் பொருள் விளக்கங்கள் அங்கங்கே தரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி மச்ச முனிவரின் குரு சிஷ்ய பரம்பரையின் எட்டாம் பேரராகிய உயர்திரு ஆன்மீக வள்ளல் சர.கோ.பார்த்தசாரதி ஐயா அவர்கள் 01-03-2012 அன்று எங்களது பகல் நிகழ்ச்சிக்குப் பின் இரவு 10 மணி சுமாருக்கு சபை தொடங்கி அதில் பெரிய ஞானக் கோவையில் சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தந்த பின்,அதில் உள்ள சிவானந்த போதம் என்ற நூலில் உள்ள சிஷ்யன் கேள்வி கேட்க குரு சொல்வது போல் ரூபமாயுள்ள அறிவு மன உரையாடல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு,முடிவில் உபதேசம் அளிக்கப்படும்.அந்த உபதேசம் முடிய அதி காலை 3.30 ஆகிவிடும்.

எனது இணைய தளத்தில் நமது மச்ச முனிவரின் சித்த ஞான சபை புதிய கட்டிடத்திற்கு நன்கொடை கேட்டு சபை புதுப்பித்தலில் உங்கள் பங்களிப்பை சேர்க்க ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.அது இந்த ஆலயம் கட்டும் புண்ணியம் எல்லோருக்கும் போய்ச் சேரட்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது.இந்தப் பக்கம் சபை திறப்பு விழாவின் பின்னர் நீக்கப்பட இருக்கிறது.பலர் புண்ணியம் தேடி பணத்தை வாரி இறைக்கக் காத்திருக்கும் போது, பல சிவன் அடியார்கள்  சிவனுக்காகவும் ,சிவனடியார்களுக்காகவும் உயிரையும் ஈந்த இந்தத் தமிழ் நாட்டில் பொருளுக்காக மேலும் நான் கேட்டுக் கொண்டே இருக்க விழையவில்லை.

பொருளில்லார்க்கு இவ்வுலக மட்டும் இல்லை.அருளில்லார்க்கு எவ்வுலகும் இல்லை.அருள் பெருக!!!!ஞானம் சிறக்க!!!!வாழ்க சித்தர் புகழ்!!! சித்தர் அடிவணங்கும் அன்பன் சாமீ அழகப்பன்!!!!!