ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 2

மேற்படி கருப்பசாமி கோவில் காட்டில் உள்ள மகா மூலிகையான நத்தைச் சூரியைப் பற்றி இப்போது பார்ப்போம். இதை குழி மீட்டான் மூலிகை என்றழைக்கப்படுகிறது.அதாவது பிணமாகிக் குழியில் விழுந்தவனையும் மீட்டெடுக்கும் என்பதால் இந்தப் பெயர். நத்தைச் சூரி எண்ணெய் வர்ம பாதிப்புகளில் இருந்து உடலைவிட்டு உயிர் பிரியாமல்  மீட்பதாலும் இதற்கு இந்தப் பெயர்.

மஹா மூலிகை நத்தைச் சூரி

எனது சீடர்களில் ஒருவரான திரு நரசிம்மன்,கோவை கையில் நத்தைச் சூரியுடன்

நத்தைச் சூரி விதையை புறாவும் , காடையும் , கவுதாரியும் , குருவியும் இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போக சக்தி மிக அதிகமாக இருக்கிறது.உடலை மிக அதிகமாக இறுக்கும்.உடல் இரும்பு போல ஆகும்.ஒரு மண்டலம் இச்சா பத்தியத்துடன் இருக்க அதிக பலமுண்டாகும்.விந்தை ஸ்தம்பனம் செய்ய உதவும்.இதனால் நூறு பெண்கள் வந்தாலும் இந்திரிய ஸ்கலிதம் ( விந்து நஷ்டம் ) இல்லாமல் , நூறு பெண்களையும் திருப்தி செய்யலாம். ஏனெனில் விந்து ஞானத்துக்கு மிக முக்கியம்.

இதன் சக்தியை விளக்க ஒரு சிறிய பரிசோதனை செய்து அதை படமாக எடுத்து இங்கே போட்டுள்ளேன்.என்னிடம் இந்த அளவு சக்தியுள்ள ஐ போனில் உள்ள காமிராதான் இருக்கிறது.எனவே படத்தில் இந்த அளவுதான் தெளிவாக எடுக்க முடிந்தது. ஒரு ஒளிக்காட்சி எடுக்க அந்தக் காட்டில் எங்களிடம் வேறு வசதிகள் இல்லை.

நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு சாறை நன்றாக மென்று விழுங்கிய பின் கண்ணில் மண்ணைப் போட்டால் கண் உறுத்தாது.கண் அறுகாது . நத்தைச் சூரியினால் கண் பலம் பெற்று விடுவதனால் இந்தளவு இதன் சக்தி வெளிப்படுகிறது . கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.சாதாரணமாக சிறு தூசி விழுந்தாலே கண்கள் உறுத்தும் . ஆனால் இங்கோ??????!!!!!!!!

சாதாரணமாகக் கண்கள்

நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணில் மண்ணைப் போட்டால் உறுத்தாமல் கண்ணீர் கொட்டாமல் எப்போதும் போல பார்த்துக் கொண்டிருக்கலாம்.கண்ணிற்கு அவ்வளவு வல்லமை அளிக்கும். நோக்கு வர்மம் மற்றவரின் மேல் பிரயோகம் செய்ய  கண்ணிற்கு பலம் அளிக்கும் மஹா மூலிகை.இது மட்டுமல்லாமல் மந்திரப் பிரயோகங்களிலும், இதை காலற்ற , உடலற்ற , தலையற்ற நாட்களைத் தவிர்த்து மற்ற முழு நாளில் தூப தீப எலுமிச்சம் பழம் பலி கொடுத்து சாப நிவர்த்தி செய்து எடுத்து இதன் வேரை தாயத்தில் அடைத்து இடுப்பில் அணிய சகல லோக வசியம் , ஞான வசியம் , லட்சுமி வசியம் , சரஸ்வதி வசியம் ,  பார்வதி தேவி வசியம் சித்திக்கும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது.

நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணில் மண் போடுதல்

கண்ணில் மண் போட்ட பின் 

கண்ணில் மண் போட்ட பின் திறந்த கண்களில் கண்ணீர் இல்லை

கண்ணில் மண் போட்ட பின் திறந்த கண்களில் கண்ணீர் இல்லை மண் வெளியே வருவதும் கண்ணின் கருமணியில் மண் துகள்கள் இருந்தும் கண் கூசாமல் கண் திறந்திருக்கும் நிலை

பதிவு பெரிதாகப் போவதால் இதன் பாகம் மூன்றை அடுத்த ஒரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.

மற்றவை ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 3 ல் காண்க.