முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு ( பாகம் 1 )

எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.
இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு ராஜயோக திருலத்திரு மஹ்தூம் பாவா பக்ருதீன் அவர்களின் 39 வது நினைவு சந்தன மலரஞ்சலி சமர்ப்பண விழாவுக்காக அனுப்பப்பட்ட அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.
முஸ்லீம் அன்பர்கள் குர்ரான் என்ன சொல்லியுள்ளது என்பதை தெளிவாக பாவாவிடம் அறிந்து கொண்டு பிறவிப்பயன் அடைந்து ஞானத்தில் திளையுங்கள்.இது முஸ்லீம் அன்பர்களுக்கு எனது ரமலான் நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்புப் பரிசு.
நன்றி
அன்புடன்
சாமீ அழகப்பன்