இசுலாமிய அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு ( பாகம் 3 )

எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.

இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு இப்போது வந்திருக்கும்  பேரின்பப் பொங்கல் திரு விழா அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.மேற்படி அழைப்பை உங்கள் எல்லோருக்குமான அழைப்பாக இங்கே வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன். முஸ்லீம் அன்பர்கள் குர்ரான் என்ன சொல்லியுள்ளது என்பதை தெளிவாக பாவாவிடம் அறிந்து கொண்டு பிறவிப்பயன் அடைந்து ஞானத்தில் திளையுங்கள். இது முஸ்லீம் அன்பர்களுக்கு எனது தமிழர் திருநாள்  நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்புப் பரிசு.

அருட் திரு காமில் ஸ்ரீ இப்ராஹிம், கூத்தாநல்லூர் அவர்களின் அலை பேசி எண்  +919486309686 தொடர்பு கொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்கள் பணிவுடன் தொடர்பு கொள்ளலாம் .

தங்களிடம் உள்ள அதைத் தாங்களே தெரிந்து தெளிய வாருங்கள்.அங்குமிங்கும் தேடி அலையாதீர்கள், தங்கு தடையின்றி தாங்கள் பெற எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள (அல்லாவான ) பெரும் பரமனுடைய அருள்  பாரினில் உள்ளதாகவே இருக்கிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!!
பிஸ்மில்லாஹிர்ரஹிமான் ஹிர்ரஹீம்.இந்த பிஸ்மில் குறத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.இறைவன் கலீமாவாக இருக்கிறான்.அந்தக் கலீமாவைத் தெரிந்து கொள்ள ராஜ கம்பீரம் பாவாவிடம் வாருங்கள்.