மச்சமுனி மூலிகையகம் (பாகம் 18 ) மச்சமுனி ஈரல் காப்பான் (பாகம் 2)

சுதந்திரதினசிறப்புப்பதிவு .

மச்ச முனிவரின் சித்த ஞான சபை வலைத்தள வாசக அன்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் .சுதந்திர தின சிறப்பாக இரட்டைப் பதிவுகள் வெளியிடப்படுகின்றன.

மச்சமுனி மூலிகையகம் (பாகம் 17 ) மச்சமுனி ஈரல் காப்பான் (பாகம் 1)ஐ படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும் .

வயிறு சக்தி நாளம்  காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை இயங்குகிறது . காலை உணவை   அந்த நேரத்துக்குள் கண்டிப்பாக சாப்பிட்டுவிடுங்கள் .அது அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.காலை உணவை ஒரு ராஜாவைப் போல் சாவதானமாக சாப்பிட வேண்டும் . ஒரு ராஜா சாப்பிடும் உணவைப் போல் அது இருக்க வேண்டும் . ஏனெனில் காலை உணவே உடலைக் காக்க வல்லது . சத்துக்களை முழுவதுமாக ஏற்க உடல் தயாராக இருக்கும் . ஏனெனில் உடல் 12 மணி நேர பட்டினிக்குப் பின் உடல் ஏற்கும் உணவு இது.காலை உணவை  ஆங்கிலத்தில் BEAK FAST என்பார்கள் (BREAKING THE FASTING).அதாவது பட்டினியை உடைப்பது என்ற பொருளில் கூறுகிறார்கள் .

எனவே அந்த காலை நேர  உணவைத் தவிர்க்காமல் இருப்பதுடன் , அதன்பின்னர்  காலை  9 மணியிலிருந்து 11 மணி வரை  சாப்பாட்டை தவிர்ப்பதும் நல்லது .ஏனெனில் அது மண்ணீரல் ( SPLEEN ) சக்தி நாளம் இயங்கும் நேரம் .மண்ணீரல் ( SPLEEN ) சக்தி நாளம் இயங்க அதற்கு அதிக பழு கூடாது .அந்த நேரத்தில் சாப்பிடுவது மண்ணீரல் ( SPLEEN ) சக்தியை குறைத்துவிடும்.எனவே அந்த நேரத்தில் சாப்பாட்டை தவிர்ப்பது நலம் .

அமீர் சுல்தான் அவர்களது மைத்துனர் ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்திருந்தார். அவருக்கு  ஈரல் இருக்கும் பகுதியில் வலி ஏற்பட அவர் , அல்லோபதி மருத்துவத்தில் உள்ள காந்த அலைவு வரைபடம் (M.R.I)  , ஈரல்  செயல்பாட்டு சோதனை  (LIVER FUNCTION  TEST) , கணனி  அலைவு பரிசோதனை (C.T SCAN) ஆகியன செய்தும் ஒன்றும் புரியவில்லை .நாம் அப்போது சென்னை சென்றிருந்த நேரம் , எம்மிடம் மேற்கண்டவற்றைக்  காட்டி எம்மிடம் தீர்வு வேண்டும் எனக் கேட்டார்கள் . கையில் நாடியில் ஈரலுக்கான நாடி அடிக்கவில்லை . எனவே ஈரல் சக்திக் குறைபாடு என தெரிந்து கொண்டு , எங்கள் பரம்பரை வைத்தியத்தில் உள்ள அதற்கான மருந்துகளைக் கூறி   சேர்க்கச் சொன்னோம் .விளைவு  இந்த ஈரல் காப்பான் பிறந்தது .

ஈரல் காப்பான்நமது மச்சமுனி மூலிகையகம் ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது. இந்த முயற்சிக்கு நமது வாசகர்கள் மிக சிறப்பான ஆதரவை வழங்கிவருகின்றனர் . ஆளில்லாத இடத்தில் சேவைக்கும் இடமில்லை அல்லவா? மனிதனே இறை சொரூபம் . எனவே எமக்கு இந்த வைத்திய  விடயங்களை தெரிவித்த இறைவனே , தாமே இந்த சேவைக்கு வாசகர்களையும் அனுப்பி இறைவனே, அந்த இறைவனே இந்த சேவையை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறான் . எனவே சேவைக்கு இடமளித்த இறை சொரூப வாசகர்கள் அனைவருக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.எல்லோரையும் இயக்கும் அந்த இறைவனுக்கும் நன்றி.

மேலும் மச்ச முனிவரின் சித்த ஞான சபை வலைத்தள வாசக அன்பர்களுக்கு மேலும் ஒரு அன்பளிப்பு . மச்ச முனி குத்தூசி மருத்துவ மனை ( MACHA MUNI ACU PUNCTURE CLINIC )  சுதந்திர தின பரிசாக அளிக்கப்படுகிறது .இங்கு மலர் மருந்துகளினாலும் மருத்துவம் செய்யப்படுகிறது.

நிறைவான சேவை, எளிமையான கட்டணத்தில் இங்கு நமது வாசகர்களுக்கு கிடைக்கிறது. ஏழைகளுக்கு இந்த எளிமையான கட்டணத்திலும் தள்ளுபடி உண்டு. அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மச்ச முனி குத்தூசி மருத்துவ மனை ( MACHA MUNI ACU PUNCTURE CLINIC ) முகவரி:-

திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர்  மற்றும் நிர்வாக இயக்குனர்             மச்சமுனி மூலிகையகம்
( MACHAMUNI HERBALS )
S.S.I NO: 330021189121
எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
Cell: 9597239953

படத்தில் வெளியிட்டுள்ள மின் அஞ்சல் சரியானது அல்ல.அது அச்சுப் பிழையால் தவறாக அச்சிடப்பட்டுள்ளது .சரியான மின் அஞ்சல் முகவரி.

machamunimooligaiyagam@gmail.com

நமது தயாரிப்புகளின் தரத்தாலும், அவைதரும் நற்பயன்களாலும் ஈர்க்கப்பட்டு, நம்மைப்போலவே மற்றவர்களும் பயன்பெறவேண்டும் என்கிற மகத்தான நோக்கத்துடன், மக்களிடம் நமது தயாரிப்புகளை பரப்பிவரும் நமது மச்சமுனி வாசகர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றோம். அந்தப்பகுதியில் உள்ள நமது வாசகர்கள் நமது தயாரிப்புகளை அவர்களிடம் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.

1. முனைவர் குலோத்துங்கன் கணபதி. நமது வலைதளவாசகர். இவர் பெங்களூரில் உள்ளார். இவர் அமெரிக்காவில் டெக்ஸாசில் பயோகெமிஸ்ட்ரியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதுடன், முனைவர் பட்டத்துக்கு அடுத்த ஆராய்ச்சிபட்டமான ஃபெல்லோசிப்பையும் பெற்றுள்ளார். இப்போது பெங்களூரில் உள்ள பயோகான் ரிசர்ச் செண்டரில், அசோசியேட் சைண்டிபிக் மேனேஜராக பணிபுரிந்துவருகின்றார்.
இவர் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, சித்தமருத்துவத்தில் ஆழமான ஈடுபாடுள்ளவர். சித்தமருத்தவத்தில் பட்டயம் பெற்றுள்ளார். வர்மமருத்துவத்தையும் பயின்றுள்ளார். கூடுதலாக சுஜோக் அக்குபங்சரும் அறிந்தவர். மாலை ஆறுமணிக்கு மேல் தனது ஓய்வு நேரத்தில் மருத்துவமும் செய்துவருகின்றார். நமது மச்சமுனி ஹெர்பல்ஸின் தயாரிப்புகள் அவரிடம் கிடைக்கும். பெங்களூரில் உள்ள நமது வாசகர்கள் அவரை அணுகி நமது தயாரிப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
அவரது முகவரி: DR.KULOTHUNGAN GANAPATHY, # 2, VP ROAD, RAJALAKHSMI COMPLEX, MADIWALA, BANGALORE-560068. CELL: 8884799177.

திரு முஹம்மத் ஆசிக் அவர்கள் நமது மச்சமுனி வலைதளத்தின் வாசகர். மச்சமுனிமூலிகையகத்தின் தயாரிப்புகளை வாங்க துணைவியாருடன் சென்னை வந்திருந்தார். நமது மச்சமுனி ஹெர்பல்ஸ் அலுவலகத்தில் நமது வாசகர்களுக்காக அக்குபங்சர் சிகிட்சையும் தரப்படுகின்றது. அவரது துணைவியாருக்கு அக்குபங்சர் சிகிட்சை தரப்பட்டது. பின் அவர்கள் இலங்கை திரும்பிவிட்டனர். நமது மச்சமுனி தயாரிப்புகளின் தரம் அவர்களை வெகுவாக கவர்ந்துவிட்டதால், அதிக அளவில் நமது தயாரிப்புகளை வாங்கி இலங்கையில் தேவைப்படுவோருக்கு வழங்கலாயினர். மேலும் நமது அக்குபங்சர் சிகிட்சை அவர்களுக்கு நல்ல பலனை தந்ததால், அவர்களது மாலத்தீவு உறவினர்களுக்கும் சொல்லி அனுப்பினர், அவர்களும் இங்கு வந்து அக்குபங்சர் சிகிட்சை செய்துகொண்டதுடன், மச்சமுனி தயாரிப்புகளையும் வாங்கிச்சென்றனர்.

கடந்தமாதம் மீண்டும் ஒருமுறை திரு. முகமது ஆசிக் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து, அக்குபங்சர் சிகிட்சை செய்து கொண்டு, மச்சமுனி தயாரிப்புகளை வாங்கிச்சென்றார். இலங்கையில் நமது தயாரிப்புகள் இவரது முகவரியில் கிடைக்கும்.

இலங்கையிலுள்ள உள்ள நமது வாசகர்கள் திரு முஹம்மத் ஆசிக் அவர்களை  அணுகி நமது தயாரிப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
A.S. MOHAMED AASIQ, MANAGING DIRECTOR, SHUCKRY TRAVELS, K/G 3A, DIAS PLACE, GUNASINGHEPURA, COLOMBO-12, SRILANKA. CELL: 0777 387804, 0777 4162311, TEL:0094 112 424 666, 114 999 786,115 352 249.
வலைத்தளங்களில் மிகச்சிறப்பாக வாசகர்களின் நலனை கருதுவதில் சிறந்த  வலைத்தளமாக திகழ்வது நமது மச்சமுனி வலைத்தளம் , என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோலவே மச்சமுனி மூலிகையகத் தயாரிப்புகளும் மிகச்சிறப்பானவை என்ற பெயரை முதல் வருடத்தில் நிலைநாட்டியுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தது நமது வாசகர்களே.அவர்களுக்கு நமது நன்றி. இனிவரும் வருடங்களிலும் நமது சிறப்பான சேவை தரம் குறையாமல், பலதளங்களில் விழுதுவிட்டபடி தொடரும், என உறுதிகூறுகின்றோம்.எதிர் காலத்தில் பலன் கருதாத வண்ணம் சேவையாற்றும் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் எண்ணம் உண்டு இறைவன் அருளால் அது நிறைவேறும் என சங்கல்பம் கொண்டு விடை பெறுகிறோம். நன்றி! வணக்கம்!!.