புற்று நோய் குணமாக்கலும் சர்க்கரை நோய் குணமாக்கலும்

நாம் பல வலைத்தள அன்பர்களுடன் அலை பேசியில் பேசித் தொடர்பு வைத்துள்ளோம்.அவர்களில் பலர் என்னிடம் மருந்துகள் சம்பந்தமாகக் கேட்டு பலன் பெறுகிறார்கள் .இதுவும் அவர்களின் விதிப்படியேதான் என்று எண்ணுகிறோம்.எம்மிடம் பேசுபவர்களில் திரு உதய் என்பவர் அடிக்கடி பேசுவார்.

அவர் தாயாருக்கு புற்று நோய் என்று என்னிடம் கூறினார்.ஆனால் அதற்கு மருந்து ஒன்றும் கேட்கவில்லை, மாறாக நாங்கள் அவருக்கு வேதியியல் சிகிச்சை (CHEMOTHERAPY ),  கதிர் வீச்சு சிகிச்சை  ( RADIOTHERAPY) அளிக்கப் போவதாகக் கூறினார்.நாம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினோம். திரு உதய்யும்  , நான் கூறியதை என் பெற்றோர் கேட்கவில்லை என்று கூறினார். நாம் அப்போது , அதற்குப் பதிலாகக் கூறியதை இங்கே அப்படியே தருகிறோம்.நாம் அரியலூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எமது மனைவியின் தாயாருக்கு , கர்ப்பப்பையில் புற்று நோய் போன்றதொரு அறிகுறி உள்ளதென்று தொலைபேசியில் தெரிவித்தார்கள்.அப்போது அலைபேசிகள் இல்லை. நாம் அதற்கு “C A 125 (CANCER ANTIGEN) என்ற பரிசோதனை செய்தாலேயே அது புற்று நோய் என்பது தெரிந்துவிடும். அதாவது இந்த கேன்சர் செல்களைக் கொல்ல உடல் உற்பத்தி செய்யும் நோய் எதிர்ப்பு மூலக் கூறே அது .எமது மனைவியிடம் கேன்சர் கட்டியை வெட்டி பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்பார்கள், அதை மட்டும் செய்யாதீர்கள் என்றோம் “.  அதற்கு முன் காரியம் மிஞ்சிவிட்டது .” BIOPSY ” என்று சொன்னார்கள் . செய்யுங்கள் என்று சொல்லிவிட்டோம் .அதன் பின்னர்தான் தெரிந்தது , கட்டியை வெட்டி அனுப்புவதுதான் ” BIOPSY ” என்று  ”எமது மனைவி சொன்னார்கள். மிக வருந்தினேன். ஏனென்றால் புற்றுக் கட்டி என்பது அதைத் தொடாமல் இருக்கும் வரை அதிகம் பரவாது ,மாறாக கத்தியை வைத்து அதை வெட்டும் போது புற்று நோயின் செல்கள் விதைகளாக உடலெங்கும் பரவிவிடும்.

இதைத்தான் அல்லோபதி மருத்துவத்தில் முதலாவதாக செய்கிறார்கள்.தயவு செய்து இது போன்றதொரு முட்டாள்தனத்தைச் செய்யாதீர்கள் . இது போன்ற ” BIOPSY ” செய்துவிட்டால் புற்று நோயின் செல்கள் விதைகளாக உடலெங்கும் பரவிவிடும் என்பதால் சித்த மருந்து சிகிச்சை ஏதும் செய்யவில்லை. இதன்பின்னர் அல்லோபதி மருத்துவ முறையில் , எனது மனைவியின்  தாயாருக்கு செய்யப்பட்டது  வேதியியல் சிகிச்சை (CHEMOTHERAPY ),  கதிர் வீச்சு சிகிச்சை  ( RADIOTHERAPY) அளிக்கப்பட்டது . விளைவு பூமியில் ஒரு கடும் நரகத்தைச் சந்தித்தார்கள் , கதிர் வீச்சு சிகிச்சையின்போது  ( RADIOTHERAPY) யோனித் துவாரத்தில் கதிர்வீச்சை கொடுத்துவிட்டு அந்த கருவியை எடுக்கும் போது , யோனித் துவாரத்திலிருந்து இரத்தம் வெளியே வந்து அந்தப் பகுதி முழுவதும் இரத்தம் நனைந்தது. இது மிக நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் கூறியதாக என் மனைவி கூறினார்கள் . (இதனைக் கேள்விப் பட்டவுடனேயே இது சித்திரவதைக் கூடங்களில் நடப்பதைப் போலல்லவா இருக்கிறது என நினைத்தேன்) . ஆனால் எனது மாமியார் அவர்களோ , ஒன்றுக்குப் போகும்போதும் , எப்போதும்  நீர்த்தாரை முழுவதும் கடும் எரிச்சலும் வேதனையும் இருக்கிறது .என்று கூறிக் கொண்டே இருந்தவர்கள் , அந்த சிகிச்சையின் முடிவில் உடலெங்கும் எரிகிறதே , எரிகிறதே என்று புலம்பி , கண்ணீர் விட்டுக் கதறினார்கள் .உடலெங்கும் ரணமாகி , பெரும் வேதனையை அனுபவித்தார்கள்.

கடைசியில் எனது மாமியார் அவர்கள் உயிர் பிரியும் தருவாயில்  என்னை அழைத்தார்கள். என் கையைப் பிடித்துக் கொண்டு “ உங்கள் மனைவியை என் மகளை முள் முனை முறியாமல் (காலில் முள் பாய்ந்துவிட்டால் அதனை எடுக்கும் போது அதன் முனை முறிந்துவிட்டால் , அந்த முள் முனை உள்ளேயே இருந்து புறையோடி காலையே எடுக்க வேண்டி வரும் . சில சமயம் உயிர் ஆபத்து கூட நேரலாம் . எனவே முள் முனை முறியாமல் பார்த்துக் கொள்வது என்றால் என் மகளை உங்கள் மனைவியை கண்ணீர் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொருள் )பார்த்துக் கொள்ளுங்கள் , நான் இனிமேல்  உயிரோடு இருக்க மாட்டேன் இந்த சித்திரவதையை என்னால் பொறுக்க முடியவில்லை என்று கதறியபடியே உயிர் விட்டார்.

இதில் முக்கியமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். எனது நண்பர் இது போன்ற கர்ம வியாதிகளுக்கு மருந்துகள் கொடுத்து வருகிறார். அவர் இது போன்ற அல்லோபதி மருந்துகள் கொடுத்துக் கொண்டே , சித்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.அவருக்கு நான் சொன்னது மேலே சொன்னவைகளைத்தான்,மேலும் சித்த மருந்து உயிர் கொடுக்கும் , ஆனால் அல்லோபதி மருந்து உயிரை எடுக்கும் . புற்று நோயாளி இறந்துவிட்டால் பொது மக்கள் “அல்லோபதி வைத்தியம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது , இந்தக் காலத்தில் போய் நாட்டு மருந்தைக் கொடுத்துக் கொன்றுவிட்டார்கள் “என்று சித்த வைத்தியனின் மேல் பழி போடுவார்கள்.எனவே கொல்வது அல்லோபதி மருத்துவராக இருந்தாலும் (அல்லோபதி மருத்துவர்கள்  “LICENSED TO KILL “) பழி அவர்கள் மேல் சொல்ல மாட்டார்கள் , சித்த வைத்தியரின் பேரில்தான் சொல்வார்கள் .எனவே அல்லோபதி மருத்துவ முறையை மேற்கொண்டு கொண்டே சித்த மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன் மருந்து கொடுங்கள் என்று கூறினால் எனது சித்த மருத்துவ நண்பர்களே அவர்களை நல்ல இதமான வார்த்தைகளைச் சொல்லி , மருந்துகள் ஏதும் கொடாமல் திருப்பி அனுப்பிவிடுங்கள்.இல்லையேல் அந்த நோயாளரைக் கொன்றது அல்லோபதி மருந்துகளாக இருக்கும் பழி சித்த வைத்தியர்கள் மேல் விழும் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

திரு உதய் அவர்களின் தாயார் உயிரிழந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.அன்னாரின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.அத்துடன் பல்லாயிரக் கணக்கானவர்கள் இனி நம் நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் இங்கே எச்சரிக்க விரும்புகிறேன் , இதற்குக் காரணம் நம் பல்லாண்டுகளாக பசுமைப் புரட்சி என்ற பெயரில் , உணவுப் பொருள் உற்பத்தியில் பயன்படுத்தி வந்த, நஞ்சுக்களான உரம் , மற்றும் பூச்சி மருந்துகளே.மேலும் அல்லோபதி மருந்துகளின் பயன்பாடு என்பது இந்த நோயை அதிகரித்துள்ளது .அதாவது எல்லா வலிகளுக்கும் உபயோகிக்கும் பாராசிட்டமால் தொடர்ச்சியாக 100 மாத்திரைகள் பயன்படுத்தினால் புற்று நோய் உறுதியாக வரும் என்று நீதியரசர் பலராமையா அவர்கள் தமது புற்றுநோயைக் குணமாக்கலாம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தப் பதிவு இப்போது மிக அவசியமானதாகவே உள்ளது .நீதியரசர் பலராமையா அவர்கள் உயிருடன் இருந்த போது , புற்று நோயால் பாதித்த பலரை எமது வேலைப் பழுவின் காரணமாக எம்மால் சிகிச்சையளிக்க இயலாது என்று கூறி, நீதியரசர் பலராமையா அவர்களின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரது மருத்துவ மனையில் , புற்று நோய்க்கு சில எளிய மருத்துவக் குறிப்புக்களை  கொடுத்துள்ளார்கள் . அதைக் கீழே கொடுத்துள்ளோம் . பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

judge palaramaiah cancer treatment 2

துளசி இலை , அருகம்புல் இலை இவற்றைப் பயன்படுத்தும் போது அவற்றை நன்றாக அலசிய பின்னர் உபயோகிக்கவும் , ஏனெனில் மாடு ஆடு போன்றவை மேயும் போது அவற்றின் மலம் மற்றும் மூத்திரம் (லெப்டோ பைரோசிஸ் ) போன்றவற்றில் இருக்கும் கிருமிகள் பரவ ஏதுவாகும்.இதற்காகவேதான் ஒவ்வொரு கோவிலிலும் நந்தவனம் போன்றவை அமைத்து நம் முன்னோர்கள் ஆடு மாடுகள் அணுகாதவாறு பாது காத்து வந்தனர்.ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு மூலிகை என்று உண்டாக்கி வைத்தார்கள் . நாம் அவற்றின் காரணம் புரியாமல் வீதிக்கொரு கோவில் உண்டாக்கி வருகிறோம்.ஆனால் அவற்றுக்கு நந்தவனம் போன்றவை உண்டாக்க இயலாது .இதனால் கோவில் உண்டாக்கப்பட்டதன் முழு நோக்கம் நிறைவேறவில்லை.அருகம் புல்லை உபயோகிக்கும் போது அதன் கணுப் பகுதியை நீக்கியே இலையை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.வீதியோரங்களில் அருகம் புல் ஜூஸ் என்று தயாரித்து விற்பவர்கள் இது போன்ற கவனங்களை மேற்கொள்வதில்லை .எனவே இவற்றை உபயோகிப்பதில் கவனம் தேவை.வில்வ மரம் ஒவ்வொரு சிவன் கோவிலிலும் உண்டு .இதில் மஹா வில்வம் என்பது மிகச் சிறப்பு மிக்கது .

மேலும் புற்று நோயைத் தீர்ப்பதில் மிக வல்லமையான எனது முப்பாட்டனாரின் மருத்துவக் குறிப்பொன்று தருகிறேன். இதில் கூறப்பட்டுள்ளவைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

நூறு ஆண்டுகள் பழமையான வேப்ப மரத்தைக் கண்டுபிடியுங்கள் . அது ஏதாவது பழைய கோவிலில் இருக்கும். அது ஊர்ப் பெரியவர்களின் பாதுகாப்பில் இருக்கும்.அந்த வேப்ப மரத்தின் பட்டைகளை மருந்துக்காக வெட்டிக் கொள்ள அவர்களிடம் அனுமதி கோருங்கள். அதை மும்முறை வலம் வந்து வணங்கி , நோயாளரின் பெயரை, ஒரு பனங்குருத்தோலையில் எழுதி மஞ்சள் தடவிய நூலால் கட்டி அந்த வேப்ப மரத்தில் கட்டுங்கள். பின் அந்த வேப்ப மரத்தின் அருகில் சென்று ” நசி ! மசி! உன்னுயிர் , உன்னுடலில் தங்குவதாகுக! என்று 108 முறை செபித்து பின்னர் மரப்பட்டைகளை வெட்டி எடுக்க வேண்டும். மரப்பட்டையை வெட்டிய பின்னர் அந்த இடத்தில் அந்த மரத்தின் கீழே இருக்கும் மண்ணை குழைத்து அப்பி விட வேண்டும் . மரத்தைப் பாது காப்பது அதன் பட்டைகளே , அதனை வெட்டிவிட்டால் மரம் பட்டுபோய்விடும்.பல நூறு ஆண்டுகளாகக் காக்கப்பட்டிருந்த மரம் பட்டுப் போய்விட்டால் பலருக்கும் பயனில்லாமல் போய்விடும்.மரப்பட்டைகளை வெட்டிய காயத்தை ஆற்ற மண்ணே மருந்தாக வேலை செய்து அந்த காயத்தை ஆற்றி மீண்டும் மரப்பட்டையை வளர்த்துவிடும்.

பின்பு அந்த மரப்பட்டையைக் கொண்டு வந்து சிதைத்து நிழலில் உணர்த்தி காயவைத்து அதன் எடைக்கு  , நாலு பங்கு தூசி நீக்கி ,கல் மண் நீக்கி தண்ணீரில் அலசிக் காய வைத்த சீரகம் சேர்த்து கல்லுரலில் இடித்து பருத்தி சல்லாத் துணியில் சலித்து(வஸ்திர காயம் என்பார்கள்) எடுத்து வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் அந்தி , சந்தி (காலை ஆறு மணிக்கும், மாலை ஆறு மணிக்கும் குளித்து முடித்து அரை மணி நேரம் கழித்து) ஆறு மாதங்கள் சாப்பிட்டு வர புற்று நோய் குணமாகும்.

இதே போல் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் , வந்ததைப் போக்கவும் பலமுறைகள் உள்ளன.அதில் மது மர்த்தினி சூரணம் என்றும் மது மேக சூரணம் என்றும் அழைக்கப்படும் சூரணம்  சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதுடன் , ஆறு மாதங்கள் தொடர்ந்து உபயோகிக்க சர்க்கரை நோயினால் ஏற்பட்ட அத்தனை பிரச்சினைகளும் உடலில் இருந்து நீக்கப்படும் .கீழ்க் கண்ட பதிவுகளைப் படியுங்கள்.

https://machamuni.com/2013/08/மச்ச-முனி-ஹெர்பல்ஸ்-பாகம-2/

https://machamuni.com/2014/04/சர்க்கரை-வியாதியை-குணமா-11/

judge palaramaiah sugar treatment 001

நன்றி நீதியரசர் பலராமையா அவர்கள்.