அக்கு பஞ்சர் அறிவோமா ? பாகம் ( 12 ) L.I.4 , HOKU , கவளி வர்மம்

எச்சரிக்கை :-இதில் உள்ள விடயங்கள் எல்லாம் மிகத் தரம் வாய்ந்த வர்ம மருத்துவராலோ அல்லது அக்கு பஞ்சர் மருத்துவராலோ மட்டுமே செய்யப்பட வேண்டும். மாறாக விளையாட்டுக்கோ, செய்து பார்ப்போம் என்ற வீண் செயலிலோ ஈடுபட்டால் விளையும் விளையும் உயிர்ச் சேதத்துக்கோ உடல் சேதத்துக்கோ நாம் பொறுப்பேற்க முடியாது என்று எச்சரிக்கிறோம். 

இப்போது மிக முக்கிய அக்கு பஞ்சர் புள்ளியான பெருங்குடல் சக்தி நாளத்தின் 4 காவது புள்ளியின் பெயர் ஹோகு (   HOKU ) .இதன் பொருள் THE GREAT ELIMINATOR  . அதாவது நமது உடலில் வலிகளை மட்டுமல்ல தேவையற்ற கழிவுகளையும் நீக்கும் புள்ளி இதுவாகும்.

கீழே உள்ள காணொளிக் காட்சியைக் காணுங்கள் .இது அதிக வலி தரும் புள்ளி ஆகும். நமது உடலில் வலி ஏற்படும் போது அதை சரி செய்யவும் , உடலில் கெட்ட பகுதியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யவும் நம் உடலின் மூளையில் உற்பத்தி செய்து வைக்கப்படும் எண்டார்பின் ( ENDORPHINS ) என்ற சுரப்பு திரவம் சுரக்கிறது. இந்த திரவத்தை செயற்கையாக தயாரிக்க 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் . ஆனால் ஒரு வலி மிகுந்த அக்கு பஞ்சர் புள்ளியில் குத்தப்படும் ஒரு ஊசி 3 கிராம் என்டார்பின்னை மூளையில் இருந்து உற்பத்தி செய்ய வல்லது .எனில் இதன் சக்தியை சொல்லவும் வேண்டுமோ ???

கீழே உள்ள காணொளி , L I 4 , HOKU ல் அக்கு பஞ்சர் ஊசி குத்தும் காணொளிக் காட்சி

இந்த புள்ளி வலியில்லா பிரசவத்திற்கும் , ஒற்றைத்  தலை வலிக்கும் , முன் பக்கத் தலைவலிக்கும் , உடலில் எங்கே வலியிருந்தாலும் , இடுப்புக்கு மேலுள்ள பாகத்தில் வலி இருந்தாலும்  ஊசியை குத்திய ஒரு வினாடியில் வலி இல்லாமல் செய்துவிடும் வல்லமை வாய்ந்தது . இதற்கு வர்மத்தில் கவளி வர்மம் என்று பெயர் .இந்த வர்மத்தை ( பம்ப் செய்வதன் ) காணொளியில் காண்பித்து இருப்பது போல இலேசாக பிடித்துவிடுதலின் மூலம் உடலில் உள்ள அனைத்து வர்மங்களும் இலேசாக இளகும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

கீழே உள்ள காணொளி கவளி வர்மத்தால் உடலில் ஏற்பட்டுள்ள வர்ம பாதிப்புக்களை நீக்கும்  காணொளிக் காட்சி.

[tube]http://www.youtube.com/watch?v=sLQisKzK1Rg[/tube]

இதே கவளி வர்மத்தில் புலிக்கையீசர் என்னும் புலிப்பாணி முனிவரின் கைப்பிடி முறையை (  TIGER’ S  CLAW ) உபயோகித்து   உடலில் உள்ள சக்தியை உறிஞ்சி எதிராளியை  ஓரிரு வினாடிகளில் வீழ்த்தும் காட்சி மிக மெதுவாகவும் மிக விரைவாகவும் செய்யும் காணொளிக்காட்சிகள்.

கவளி வர்மத்தில் புலிக்கையீசர் என்னும்  புலிப்பாணி முனிவரின்  புலிக்கை பிடியை உபயோகித்து ( TIGER’ S  CLAW  )எதிராளியின் பலத்தை உறிஞ்சி ஒரிரு வினாடிகளில் வேகமாக வீழ்த்தும் முறை

இந்தக் காட்சிகளை படம் பிடித்த இடம் கான்சாபுரம் அருகில் உள்ள அத்தி கோயில் என்ற இடத்தில் கருப்பசாமி கோவிலருகே உள்ள ஆற்றில் வைத்து எடுக்கப்பட்டது.

இதை படம் எடுத்தவர்  ஆர் எஸ் மங்கலம் , கோபால் என்பவரும் ஆவர் . திரு கண்ணனின் ஒன்றுவிட்ட  சகோதரர் முருகன் என்பவர் என்னுடன் படத்தில் ஒன்றாக மல்லுக்கு நிற்பவர். மிக வலுவானவர் .

இனி ஒரு சிறப்பான சித்தர்களின் விடயத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.