துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் (4)

துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 3 ஐ படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படித்தால் தொடர்பு விட்டுப் போகாமல்  மிக நன்றாக விளங்கும்.

துத்தி விதை

 கையிற் காலிற்படர்ந்த கார்மேகம் போயொழியும்

மெய்யிலுறு குஷ்டம் போம் வெப்பகலுந் – துய்யதிரை

யத்திதனை யொத்தவிழி யாரணங்கே நாட்டிலுறுந்

துத்தி விதையைச் சுவை.

( பதார்த்த குண விளக்கம் )

குணம்:- துத்தி விதையினால்  கைகால்களிலுண்டாகும் கரு மேகமும் , குஷ்ட ரோகமும் நீங்கும் என்க .

செய்கை:-உற்சாககாரி

உபயோகிக்கும் முறை:- துத்தி விதையில் சிறிது கரி நெருப்பனனில் போட்டு , அதனின்று கிளம்பும் புகையைச் சிறு மலக்கிருமிகளுள்ள குழந்தைகளின் ஆசனத்தில் தாக்கும்படி செய்யக்கிருமிகள் வெளிப்படும்.ஆசனத்தின் ஊறலும்  அடங்கும் .

இதன் விதையை முறைப்படி கியாழமிட்டு வடிகட்டி சிறிது கற்கண்டு கூட்டிக் கொடுக்க வெள்ளை , வெட்டை , மூலம் , தந்தி மேகம் ,  முதலியவைகள் நீங்கும்.

இதன் விதையை சிறிது அனலில் வெதுப்பி (இலேசாக வறுத்து) இடித்துச் சூரணம் (பொடி செய்து) செய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கூட்டி தினந்தோறும் , அந்தி சந்தி (காலையும் , மாலையும்) திரிகடிப் பிரமாணம் ( மூன்று விரலால் எடுக்கும் அளவு ) கொடுத்து வர சர்க்கரை நோயினால் உண்டான உடலில் தோல் நோய்கள் , கடும் மேகங்களினால் உண்டான தோல் நோய்கள் (கரு மேகம் , செம்மேகம் ) , பேரு வியாதியான குஷ்டம் போகும் , உடலில் மது மேகம் , அதீத பெரும் உடலுறவினால் ஏற்பட்ட வெப்பும் அகலும் .

GangreneFoot_mini

மேலும் கைப்பழக்கத்தினால் உண்டான வெள்ளை மற்றும் வெட்டை , மற்றும் பல பெண்களோடு உறவு கொள்வதால் ஏற்படும் கடும் கிருமித் தொற்று , சர்க்கரை நோயினால் உண்டான உடலின் பல பாகங்கள் அழுகுவதும் , குறிகளில் உண்டாகும் கடும் அரிப்பு , புண் உண்டாகுவது , கை கால்களில் புண் ( காங்கரின் ) உண்டாதல் , கை கால்கள் அழுகுதல் போன்றவற்றை அடியோடு அகற்றும் .

இதன் கியாழத்தையாவது , விதைச்சூரணத்தையாவது அளவுக்கு மிஞ்சி அதிகமாக கொடுத்தால் மலத்தை இளகலாக போகச் செய்யும் , வேறு எந்த கெடுதியும் செய்யாது .

இவ்வளவு சிறப்பு மிக்க அமுதத் தன்மை நிரம்பிய துத்தி விதையை பிரித்தெடுக்கும் காரியம் மிகக் கடினமானது . ஏனெனில் அமுதம் இருக்கும் இடத்தில்தான் விஷமும் இருக்கும் என்பதற்கேற்ப துத்தி விதையை சுற்றி உள்ள சுணைகள் உடலை கடும் பாதிப்பை உண்டாக்க வல்லது . இதன் சுணைகள் நான்கு நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை அரிப்பை உண்டாக்குவதோடு வீக்கங்களையும் உண்டாக்க வல்லது.நமது வாசகர்களுக்காக நாமும் இந்த துயரத்தை அனுபவித்தோம் .

இதோ  கீழே கொடுத்துள்ள காணொளிகளில் காணலாம்.முதலில் சாக்கில் போட்டு  பருத்த பிரம்பால் அடிக்க வேண்டும்.அப்போது சுணைகள் (சுணைகள் என்பவை சிறு கண்ணுக்குப் புலப்படாத  முள் போன்றவை ) பறக்கும் .அது மூக்கு ,  வாய் ,  தொண்டை  வரை தாக்குதலை தொடுக்கும்.

தூற்றும் போது பறக்கும் சுணைகள் , விதையின்   மேலுள்ள தோல் உடல் முழுவதும் கடும் அரிப்பு மற்றும் ஒவ்வாமையை உண்டாக்க வல்லது .கண்களில் கடும் வீக்கத்தையும் உண்டாக்க வல்லது .அதற்கு மாற்றாக நஞ்சு நீக்கியை உள்ளுக்கு சாப்பிட்டும்  , மற்றும் வெளிப் பிரயோகமாக தோல் பிரச்சனைகளை போக்கும் சிவனார் வேம்புத்தைலம் பூசி இதன் தொந்தரவுகளை போக்கிக் கொண்டோம் . இதனால் பெரும் பொருட் செலவில் மிகக் குறைந்த அளவே பெறப்பட்டுள்ளது . இந்தக் காலத்தின்  பின்னர் இது கிடைக்காது. மீண்டும் அடுத்த  வருடம்தான் இதை சேகரிக்க இயலும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இந்த துத்தி விதையை தற்போது தயாரிக்கும் மது மேகச் சூரணம் , சிறு நீரக சீரமைப்புச் சூரணம் , குடல் புண் ஆற்றி , ஈரல்  நோய் நிவாரணி , தோல் நோய் நிவாரணி, மூல நோய் நிவாரணி போன்ற மருந்துகளில் இருக்கும் வரை சேர்க்கப்படும் . உடன் வாங்கிப் பயனுறுங்கள் .

இந்த துத்தி விதை என்ற ஒரு அற்புதமான மஹா மூலிகை கலந்த சிறுநீரக சீரமைப்பு சூரணத்துக்கும் ,மது மேகச் சூரணத்துக்கும் , குடல் புண் ஆற்றி , ஈரல்  நோய் நிவாரணிக்கும்மூல நோய் நிவாரணிக்கும் நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953