ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 7 )

இதற்கு முன்னர் ஞானம் உடல் சார்ந்ததா?உயிர் சார்ந்ததா? பாகம் 6 ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படியுங்கள் .நன்கு புரியும் .

குதத்தில் உள்ள மலம் நாம் பொதுவில் மலம் என்றழைப்பது .அது மஞ்சள் மலம்.எதை சாப்பிட்டாலும் மலம் மஞ்சள் நிறத்தை அடைகிறது. இந்த மலமான மஞ்சள் மலத்தை நீக்குதல் எல்லா சித்த வைத்தியர்களும் கையாளும் யுக்தி.பொதுவாக எந்த சித்த வைத்தியரும் மருந்து கொடுக்கும் முன்னர் பெருமலம் போக்கிகளை கொடுத்து பின் தான் வியாதிக்கு உள்ள மருந்துகளைக் கொடுப்பார்கள்.இவை சில சமயம் , மூல நோய்த் தொந்தரவு உள்ளவர்களுக்கோ ,அல்லது பவுத்திர ரோகம் உள்ளவர்களுக்கோ , அல்சர் என்ற வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கோ தொந்தரவு தரலாம். எனவே அதற்கு எளிய முறை மலம் போக்க வழி உள்ளது .இது மலக்குடலில் உள்ள மலத்தைப் போக்கும்.

பழைய இறுகிப் போன மலம் குடலில் இருந்து கொண்டு குடல் இயக்கத்தை தடுப்பதுடன் , குடலில் சூட்டையும் உண்டாக்கி கண்ணைச் சுற்றி கருவளையம் உண்டாக்கி ,கண் பார்வைக் குறைவையும் உண்டாக்கும். கண்ணில் அனலைக் கூட்டும். இந்த பழைய மலத்தை இந்த சாதாரண எனிமா சரி செய்து வெளியே தூக்கி எறியும். இதை பொதுவாக இயற்கை வைத்திய முறைகளிலும் ,யோகாப்பியாச முறைகளிலும் பயன் படுத்துகிறார்கள்.

வெகு காலமாக சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும், குண்டலியாம் மூலக்கனலை எழுப்பும் போது , அபான வாயு சூடேறி மலத்துடன் பந்தப்பட்டு மலம் இறுகி சூடாகி மூலாதாரம் சூடாகாமல் இருக்க மூங்கில் குழாய்களை ஆசன வாயிற் சொருகி, இடுப்பளவு தண்ணீரில்  மூல பந்தம் செய்வதன் மூலம் சுத்தமான குளிர்ந்த தண்ணீரை குத வாயின் மூலம் உறுஞ்சி பெருங்குடல் முதலான , வயிற்றுப் பகுதிகளில் சுழற்றி வெளியேற்றுவார்கள் .இது மிகக் கடினமான பயிற்சி .

ஆனால் இந்தக் கடினமான பயிற்சியான , இதையே இப்போதுள்ள இயற்கை நல வாழ்வு பயிற்சிகள் கீழ்க் கண்டவாறு எளிமைப்படுத்தி உள்ளனர்.இதை அஹிம்சை இனிமா என்று அழைக்கின்றனர்.இதையே பெண்கள் பிறப்புறுப்புப் பாதையில் திரிபலாதிச் சூரணத்தைக் கொதிக்க வைத்து ஆற வைத்து கொடுப்பதன் மூலம்  {பிறப்புறுப்பு எனிமா (douche wash  ) } வெள்ளைப்படுதல் , அதிக மாதாந்திர இரத்தப் போக்கு , மாதாந்திர இரத்தப் போக்கின் போது  வயிறு  வலித்தல் ஆகிய பிரச்சினைகளும் தீரும். கீழே இனிமா கொடுக்கும்  வழி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.பயன்படுத்தி  இன்புறுங்கள். 

 இது வயிறு சம்மந்தமான பிரச்சினைகளுக்கு மட்டும் என்று எண்ணாதீர்கள் .கழிவுகளின் பெருக்கம் நோய்கள் !!!நோய்களின் தொகுப்பு மரணம் .கழிவுகளின் நீக்கம் , நோய்களின் முடிவு . நோய்களின் முடிவு மரணத்தின் முடிவு . நோய்களையும் , மரணத்தையும் தள்ளிப் போடவும் போக்கடிக்கவும் இந்த சாத்வீக எனிமா போதும் . புற்று நோயாளர்களும் கழிவு நீக்கத்துக்கு  இந்த சாத்வீக எனிமா உபயோகிக்கலாம்  .

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 8 ல் பார்க்கலாம்.