முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 5

முக்கியமான ஒன்றை நான் இங்கே குறிப்பிட  விரும்புகிறேன். பஞ்ச பூதங்களில் நெருப்பைத் தவிர எல்லா பூதங்களுக்கும் அணுக் கட்டமைப்பு உண்டு.உரசினால் தோன்றும் பின் ஊதினால் மறையும் .எங்கிருந்து வந்தது இந்த நெருப்பு , மீண்டும் எங்கே சென்றது. அதனால்தான் சிகாரமான நெருப்பு ஒரு தனித்துவமான பூதமாக கருதப்படுகிறது.அதனால்தான் திருமூலர் நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்று சிகாரமான நெருப்பையே “ சீ” என்று குறிக்கிறார்.

இந்த சிகாரமான நெருப்பு தான் எந்த அணுக் கட்டமைப்பும் இல்லாது தான் நின்று பற்றி எரியும் பொருளை தேய்த்து அழிப்பதால் இதற்கு தேயு என்று பொருள்.

மண் பூதம் நீரை அழிப்பதால் அதனுள் நெருப்பு மறைந்து உறைகிறது (மண் நீரை உறிஞ்சித் தனதாக்கிக் கொள்ளும் .எனில் தண்ணீருக்குப் பகையான நெருப்பு அதனுள் உறைவதாகத்தானே பொருள்.மேலும் விபரம் காண அக்கு பஞ்சரில் உள்ள ஆக்கும் அழிக்கும் சுற்று பற்றி அறிய http://machamuni.blogspot.in/2010/10/4.html ).நீரில் காற்று  மறைந்து உறைகிறது(நீருக்குள் ஆக்ஸிஜனும் , ஹைட்ரஜனும் உள்ளது உங்களுக்குத் தெரியும் அதனுடன் கரைந்துள்ள ஆக்சிஜனும் இருக்கும்).

அப்படி விளைந்த இயற்கை சிவம் அல்லாகூ அஃபராக கிடக்கிறது . அந்த ஃல் இருக்கிறது சூட்சுமம் .அந்த முப்பு இங்கே முத்திரவமாக காட்சி அளிக்கிறது.அந்த முத்திரவத்தை நீதியரசர் பலராமையா அவர்கள் தமது அமுத கலசம் என்ற நூலில் கீழ்க்கண்ட படத்தில் விளக்கியுள்ளார்.

 இப்போது  படத்தில் தெரியும் இதே காட்சியை முப்பு சுண்ணத்தைக் கொண்டு சுத்த கங்கையில் போட்டு முத்திரவியமாக எம் குருநாதர் காட்டுவதைப் பாருங்கள் .

முப்பு சுண்ணம்

 முப்பு சுண்ணம் சுத்த கங்கையில்

முப்பு சுண்ணம் சுத்த கங்கையில் போட்டுக் குலுக்கிய பின்னர்

கீழே நிலம் , நடுவில் நீர் , மேலே நெருப்பான தீ என முத்திரவியங்களைப் பாருங்கள் 

மும்மூத்திரம் என்றழைக்கப்படும் முத்திரவமான நிலம் , நீர் , நெருப்பு ஆகிய மூன்றை மனித மூத்திரம் , என்றும் அமுறி என்றால் ஆட்டின் மூத்திரம் என்றும் ,மாட்டின் மூத்திரம் என்றும் , மனித மூத்திரம் என்றும் , கழுதை மூத்திரம் என்றும் தவறாக நினைப்பதால் எம் குருநாதர் அதை  முத்திரவியம் என்று பெயரிட்டுவிட்டார்.

மேற்படி முத்திரவியத்தை தயாரிக்கும் காணொளிக்காட்சி கீழே பாருங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=avDUxTvalII[/tube]