இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு(கல்விக்கு ஒரு உதவி)பாகம் 4

எமது நண்பர் திரு ஜவஹர்லால் என்பவர் எம்முடன் பணி புரிந்து சென்ற மூன்று வருடங்களுக்கு முன்னால் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு செய்த மருத்துவச் செலவுக் கடன்களை அடைக்கவே அவரது இறுதிப் பணிக்கொடையும் , தொழிலாளர் சேம நலநிதி சேமிப்பும்  உதவின.

அவருடைய புதல்வர்களில் இருவர் தற்போது பள்ளிப் படிப்பில் உள்ளார்கள் .தற்போது அந்தப் பையன்களின் படிப்புக்கு பணம் கட்ட முடியாத,  வழியில்லாத  நிலையில் உள்ளார்கள். ’’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலின் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது என்பது  முன்னோர் வாக்கு.’’  அதற்கிணங்க பண உதவி புரிய எண்ணும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் அவர்களுடைய இந்த வருட இரண்டாவது  தவணைப் பணம் கட்ட இந்த மாதம் டிசம்பர் 20 ம் தேதி கடைசித் தேதி.

சென்ற முறை மூத்த பையனுக்கு ஜ.பரத்ராஜ் உள்ள பணத்தை முடிவுத் தேதிக்குள் செலுத்தாததால் அந்தப் பையனை சௌராஷ்ட்ரா கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.

மீண்டும் அந்தப் பையனை அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ள பெருமை நம் வலைத்தள அன்பர்களான கீழ்க் கண்டவர்களையே சேரும்.

1 )திரு பரமசிவம் , சிங்கப்பூர் அவர்கள்

2 )திரு முத்துக் குமரன் , சென்னை  அவர்கள்

3 ) திரு சுரேஷ் , கும்ப கோணம் அவர்கள்

4 ) திரு மாரிச் செல்வம் , பெங்களூர் அவர்கள்

திரு பரமசிவம் அவர்கள் பணம் அனுப்பிய விவரத்தை , அவர் எமக்குத் தெரிவித்து ,நாம் அவர்களுக்குத் தெரிவித்து அந்தப் பணத்தை எடுக்க ஒரு வாரம் ஆகிவிட்டது. இதற்கிடையில் அந்தப் பையன் மைனர் ஆக இருந்தபோது ஆரம்பித்த கணக்கு இப்போது அவன் மேஜர் ஆகிவிட்டான். இதை பதிப்பித்து அவனே இந்தக் கணக்கை நிர்வகிக்க வேண்டும் என வங்கி மேலாளர் கூறி அதன் பின்னர் ஒரு வாரம் ஆகிவிட்டதில் பையனை கல்லூரியில் இருந்து நிறுத்தியேவிட்டார்கள்.

இந்த முறை அந்தத் தாமதத்தைத் தவிர்க்க எனது வங்கிக் கணக்கையும் IFSC CODE ஐயும் இங்கே கொடுத்துள்ளேன்.  ரூ 5000/= மேல் பணம் அனுப்பிவிட்டால் எனது அலை பேசிக்கு குறுந்தகவல் வந்துவிடும் . அதற்கு குறைவாக அனுப்பினால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு உடனே தெரிவியுங்கள்.நான் அதை அவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க ஏதுவாய் இருக்கும்.

மேலும் பணமாய் (CASH DEPOSIT ) செலுத்துபவர்கள் SBI வங்கி கணக்கு எண்ணில் செலுத்துங்கள் . ஏனெனில்  ICICI வங்கி கணக்கு எண்ணில்  பணமாய் (CASH DEPOSIT ) செலுத்தப்பட்டபோது அதீதமான தொகையை பிடித்தம் செய்து போட்ட பணத்திற்கு முக்கால் வாசிக்கு  மேல் கணக்கு கொண்டு வந்தார்கள் .எனவே NEFT TRANSFER  செய்பவர்கள் மட்டும் ICICI வங்கி கணக்கை உபயோகியுங்கள். போடும் பணம் உபயோகமாக வேண்டுமல்லவா???

S.ALAGAPPAN.

ICICI , RAJAPALAYAM  BRANCH ,VIRUDHUNAGAR (D-T ), TAMIL NADU , INDIA.

S.B.A/C NO :- 611501501501

IFS CODE :- ICIC0006115

மேலும் சிலர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணக்கு எண்   தேவை என்று கேட்டு கொண்டதற்கு இணங்க எனது மகளின் SBI வங்கி கணக்கு எண்ணை கீழே கொடுத்துள்ளேன்.பணமாய் (CASH DEPOSIT ) செலுத்துபவர்கள் SBI வங்கி கணக்கு எண்ணில் செலுத்துங்கள் .

SBI ACCOUNT HOLDER NAME:A.SRI LATHA.

S.B A/C NO:30807797084

A/C MAINTAING BRANCH:RAJAPALAYAM.626117

VIRUDHUNAGAR-DIST.TAMILNADU.INDIA.

IFS CODE :SBIN0000906

நான் கேட்டுக் கொள்ளாமலேயே திரு ஸ்ரீதரன் சென்னை ,அவர்கள் இரண்டாவது பையனின் படிப்புச் செலவுக்கு ரூ 3000 /= அனுப்பியுள்ளார்கள், திரு மணி கண்டன் கோவை அவர்கள் ரூ 4000/= அனுப்பியுள்ளார்கள். அனைத்து அன்பு உள்ளங்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பதிவை நான் எங்கே உரிய நேரத்தில் எழுத முடியாமல் போய்விடுமோ என அஞ்சுமளவிற்கு நமது வலைத் தள வாசக அன்பர்களின் சந்தேகங்கள் வெள்ளம் போல பெருகி வந்து எம்மை மூழ்கடித்துவிட்டது.என்று நான் வலைத் தளத்தின் உள்ளே  நுழைந்தாலும் குறைந்தது  10 கருத்துரைகளாவது பதிலளிக்கக் காத்திருக்கும்.உங்கள் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் நன்றி.

உங்களுக்கு அவசியமான கேள்விகளை மட்டும் கேளுங்கள்.அது என் நேரத்தை மிச்சமாக்கி பதிவுகளை எழுத உதவும். நாம் உங்களுடன் தொடர்பில் இருக்கும்போதே என்னால் இயன்றவற்றைத் தெரிவித்துவிடத் துடிக்கின்றேன். அதற்கு இறை ஒப்புதல் இருந்தால் மட்டுமே எம்மால் செய்ய முடியும் என்று கருதுகிறோம்.நீங்களும் இறையின் அம்சங்களே எனவே சந்தேகங்கள் உங்களுக்கு இல்லை, இருப்பது போல் தோன்றுகிறது . விரைவில் அவையெல்லாம் தானே அகலும். எமக்கறிவித்த இறை உங்களுக்கும் அறிவித்து உங்கள் மாயத் திரையை அகற்றட்டும் .