ஒன்றுமில்லை(மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் சேர)

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

யின்-யாங் (YIN-YANG) இவற்றின் குறியீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது எதனைக் குறிக்கிறது.அழித்தலும் ஆக்கலும் எங்கே சமமாக உள்ளதோ அங்கே இயற்கை சமநிலை கெடாமல் இருக்கிறது.பல்லாயிரம் வருடங்களாக அதிகமாகாமலும் குறையாமலும்(வற்றிப் போகாமலும் )  இருக்கும் வற்றாத ஊற்றுக்கள் நிறைய மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டு.அவற்றின் தண்ணீர் இது போன்றே சம நிலை கெடாத ஆயுளை நல்க வல்லவை.உயிரில் கலந்த ஞானத்தை வளப்படுத்த வல்லவை.எனெனில் அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.எங்கு இயற்கை சமநிலை கெடாமல் இருக்கிறதோ அங்கே உயிர் அழிவதில்லை.

அகாரம்,உகாரம் ,மகாரம் (ஓம்) இவற்றில் உள்ள சிகாரமான நெருப்பை(நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்) வைத்தே எமனை வெல்ல முடியும்.நாயை எப்படி ஓட்டுகிறோம். “சீ “ என்றுதான் ஓட்டுகிறோம்.

நமசிவய என்பதில் உள்ள ஐந்தெழுத்துக்களும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.பிருதிவி,அப்பு,தேயு(நெருப்பு),வாயு(காற்று),ஆகாயம் என்பதே அவை.இவற்றில் மூன்று பூதங்கள் பழுதுள்ளவை.அவையாவன நெருப்பு,காற்று ,ஆகாயம்.முதலில் வாசி ,வாசி என வாசிக்கும் காற்று நின்றவுடன் அடுத்து ஆகாயம் உயிருடன் சேர்ந்து ஓடிவிடும்.பிறகு காற்றில்லாவிட்டால் நெருப்பு ஏது ,நெருப்பு அணைந்துவிடும்.பிறகு மீதமுள்ள மண்ணும்,நீரும் பிணமாகக் கிடக்கும்.

பெரியவர்கள் சொல்வார்கள்,“`ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் “.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.பழுதுள்ள மூன்றில் கடைசியாக வெளியேறும் நெருப்பைப் பிடித்தால்.பழுதுள்ள மீதமுள்ள காற்றும்,ஆகாயமும் நிற்கும்.

இதல்லாமல் காற்றைப் பிடிப்பது கடினம்.அப்படி காற்றைப் பிடித்தாலும் தேய்க்கும் பஞ்ச பூதத்தைப் பிடிக்காவிட்டால் அது காற்றையும்,ஆகாயத்தையும் தேய்த்து அழித்துவிடும்.மேலும் பஞ்ச பூதங்களில் காற்றுக்கு அணுக்கட்டமைப்பு உண்டு,ஆகாயத்துக்கு அணுக்கட்டமைப்பு(பரமாணு அல்லது ஈதர்) உண்டு,நீருக்கும் அணுக்கட்டமைப்பு உண்டு ,மண்ணுக்கும் அணுக்கட்டமைப்பு உண்டு, ஆனால் நெருப்புக்கு மட்டும் எந்த அணுக்கட்டமைப்பும் கிடையாது.

பற்ற வைத்தால் எந்த பொருளையும் பற்றி எரிய வைத்து,அந்த பொருளை எரித்து தேய்க்கும்.எனவே இது தேயு (நெருப்பு)என அழைக்கப்பட்டது.நமதுடலும் பற்றி எரிய வைக்கப்பட்ட திரி போன்று எரிந்து இரு பூதங்கள் மிஞ்சி, கடைசியில் அவையும் சாம்பலாகிறது.இதுவே காயத்திரி மந்திரத்தின் உள் ரகசியம்.விசுவாமித்திரன் கண்டுபிடித்தது இதைத்தான்.இதுதான் காயத்திரி மந்திரத்தின் ரகசியம்.இதையே பிராமணர்கள் காலையும், மாலையும் சந்தியா வந்தனம் என்ற பெயரில் பொருள் புரியாமல் உச்சரித்து மட்டும் வருகின்றனர். காயத்தை திரியாக்கி வெறும் ஒளியுடலாக மாற்ற ஓர் எளிய வழியுள்ளது. தேயுவானவான நெருப்பு எரியும் முன் எங்கிருந்து வந்ததென்பதும் தெரியாது.மீண்டும் எங்கே சென்றதென்பதும் தெரியாது.

மேற்கண்ட நெருப்பின் வழியே சென்று ஞானத்தை அடையும் வழியே எங்கள் மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் உப தேசமாகக் கொடுக்கப்படுகிறது. அதைப் பெற எங்கள் சபையில் வரும் 2012 ஆண்டு மார்ச்சு மாதம் 1 ம் தேதி ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட இருக்கிறது.அதற்கு திருமணம் முடிந்த நபர்கள் மட்டுமே தகுதியுள்ள நபர்கள்.மேலும் இதற்கு உபதேசக்கட்டணமாக அன்றைக்கு செலவாகும் பால், பழம், சர்க்கரை, மல்லிகைப்பூ, ஆகியவற்றிற்கான செலவாக ரூபாய் 50/= ம்,கட்டிட நன்கொடையாக ரூபாய் 500/= ம் செலுத்த வேண்டும்.

எங்களது கட்டிடம் கட்டும் முன்பு இந்த தொகை 500/= கிடையாது.ஆனால் தற்போது கட்டிட செலவுகள் அதிகம் ஆனதால் கட்டிட செலவுக் கடன் ரூபாய் 3,00,000 கட்ட வேண்டிய நிலையில் இருப்பதாலேயே இந்தக் கட்டணம்.எனது குருநாதர் இது போல் கட்டணம் வசூலிப்பதில் சிறிதும் விருப்பம் இல்லாதவர்.

இப்போது வேறு வழியில்லாததால்தான் இந்தக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சாகாக் கல்வியினை கற்க இது ஒன்றும் பெருந்தொகையில்லைதானே ?????

உருவாய் அருவாய் ஆடியோ பாடல்


அடுத்த பதிவில் சபைக்கட்டிட திறப்பு விழா அழைப்பிதழும், சபைக்கு வரும் வழி முறைகளும் கொடுக்கப்படும்.