ஒரு சிறந்த ரசவாதி ( பாகம் 1 )

அகஸ்திய முனிவர் அருளிச் செய்த கற்பமுப்பூக் குருநூல்

முப்பூ முடிக்க விவரம்

சாற்றினேன் முப்பூவின் மார்க்கந்தன்னை

தவசிகட்கு கிடைக்கு மல்லால் மற்றோருக்கு

ஏற்றமுடன் கிடைக்காது இந்த நூல்தான்

இனிமையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு

நாற்றிசையிலுள்ள வர்கறியாரப்பா

நன்றாகவுந்தனுக்குத் திறந்து சொல்வேன்

ஆற்றலுடனிதையறிந்து செய்வாயானால்

அப்பனே ரிஷிசித்தனாவாய் கூறே !!!

பாடல் ( 4 )

கூறுவேன் குருமுடிக்கும் விபரமெல்லாம்

குறிப்பாக வறிந்து செய்தோன் சித்தனாகும்

தேறுவாயின்னூலை முழுதும் பார்த்தால்

சித்தனென்று பெயர்பெறலா முலகத்துள்ளே

தூறுதலாயச் சேர்ந்து கொண்டு செய்ய வேண்டாம்

சுகமாகத் தனியா நீயிருந்து கொண்டு

பேறுபெறச் செய்தாக்கால் லாபமுண்டு

பிரியமுடனுந்தனுக்குச் செப்பினேனே!!

பாடல் ( 5 )

செப்புவேன் சித்தருட பாதம் போற்றி

செந்தூரப் பற்ப முறை தன்னைச் செய்ய

அற்புதமாய்ச் சொல்லுகிறேன் முப்பூ தன்னை

அடக்கினேன் நூறுக்குள் அறிந்து பாரு

முப்பொருளு முடிந்தவிட மிந்தநூலப்பா

முக்கண்ணன் மனோன் மணியா ளெனக்குச் சொன்னாள்

தப்பிதங்களில்லை யடாயிந்த நூலை

தாய்சொன்னபடி சொன்னேன் தரணியோர்க்கே !!!

பாடல் ( 6 )

தரணியிலே நீயிருந்து தாயைப்பூசி

சற்குருவை மறவாம லேற்றிப் போற்றி

அரணியங் மாங்காடு மலை அலைய வேண்டாம்

ஆசானையொரு வருக்குங் காட்ட வேண்டாம் 

திரணமாய் நினைத்து நீவிடவே வேண்டாம்

திறமாக அகார உகாரத்தைக் கொள்ளு

பரமாகக் கற்பமது கொள்ளுவாயானால்

பார்தனிலே யெந்த நாளு மிருப்பாய்தானே !!!

பாடல் ( 7 )

இந்தப் பாடல் 7 ல் சிவப்பு எழுத்தில் காட்டப்பட்டுள்ளவை ஆசானான குருவை ஒருவருக்கும் காட்டக் கூடாது என்று அகத்தியர் கூறியுள்ளார். நான் ராமானுஜரைப் போல நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கில் ஆசானைக் காட்டித் தந்துள்ளேன்.நற்கருமம் உள்ளவர்கள் பயன் பெறட்டும்.

எம்மிடம் பலர் பல கடுமையான கர்ம வியாதிகளுக்கு ( புற்று நோய்,எய்ட்ஸ் )  மருந்து கேட்டு , மின்னஞ்சல் மற்றும் அலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர் . அவர்களுக்காக எனது குருநாதரின் அலைபேசி எண்ணைத் தர இருக்கிறேன் . அவர் தனது உடலை காய சித்தியாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் . என்னைப் போன்ற அவரது சீடர்கள் பலரும் அவர் வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.

அவருக்கு 54 வயது.அவருடைய புகைப்படத்தைப் பாருங்கள் . அவருக்கு வயது 35 சொல்லலாம் அப்படி இருக்கிறது அவர் தற்போது தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இருக்கிறது இல்லையா ???? அவரது புகைப்படம் இதோ கீழே !!!!!

 

GREEN LION SULPHER ( பச்சை சிங்கம் )

ஆண்டாள் கையில் இருக்கும் பச்சைக் கிளியும் இதுதான்,மதுரை மீனாட்சி அம்மன் தோளில் இருக்கும் கிளியும் இதுதான், சிம்ம வாகினி அருகில் இருக்கும் பச்சை சிங்கமும் இதுதான். இதுதான் சித்தர் வேதியியலில் மிகப் பெரிய படித்தரம்.

இதிலிருந்துதான் சுத்தகங்கை என்றும் , வாசி நீர் என்றும் , தேசி நீர் என்றும் , ஊசி நீர் என்றும் , மங்கையர் கருக்குடத்து நீர் என்றும் , ஆகாய கங்கை என்றும் , அமுத கலசம் என்றும் , ஐங்கோலக் கரு என்றும் , வாழவதி என்றும் , வாழை சலம் என்றும் , வாழைப்பூச்சாறு என்றும் , அமுத ரசக் குடத்து நீர் என்றும் , நாத விந்து என்றும் , கானப்பால் என்றும் , குமரிப்பால் என்றும் , அண்டக்கல் என்றும் , பூநீர் என்றும் , முப்பூ என்றும்  ,  குரு என்றும் , முப்புளி என்றும் , வானமாமலை நாதம் என்றும் , அழைக்கப்படுவதனை தயாரிக்க மூலப் பொருள் இந்த பச்சை சிங்கம்தான்.ஜெர்மன் சித்தர் பாராசெல்ஸ் தனது நூலில் இதை விவரித்துள்ளார் .

கோரக்கர் அருளிய ரவி மேகலை என்னும் நூலை ஆதாரமாக வைத்தே நீதிபதி பலராமையா அவர்களின் குருநாதர் கருணாகர சுவாமிகள் வான் மெழுகு தயாரித்து கொடுத்தார். அந்த கோரக்கர் ரவி மேகலையில் இருந்து சில பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன் .

கோரக்கர் அருளிய ரவி மேகலை – 75

காப்பு

அரு உபரதி ரூபஒளி அண்ட பிண்ட

அகரவுயிர் பிரணவமா மோங்கா ரத்தாய்

கருணைபெறுக் கற்பகத்தேன் அமுத ஞானக்

கமலபரி பூரணிமுக் கமலத் தோங்கும்

பருவரைய மதலை குமரி பராப ரிநற்

பார்பதிபங் கஜவேணி பரம நந்திக்

குருரவிமே கலையோதக் குமரிவாலைக்

குஞ்சரியென் தாய்சக்தி யிருந்தாள் காப்பே !!!

பாடல் ( 1 )

தாள்பணிந்து தெண்டனிட்டுத் தாயைப் போற்றித்

தந்ததொரு வரமதனைத் தரணி யோர்க்கு

ஏழ்மையற் றெப்போதும் இருந்து வாழ

எடுத்துரைத்தேன் சந்திர ரேகை இரு நூறு முன்னே

வாழ் நலங்கள் பெருகிடவும் வாத யோகம்

வழுத்திடுவேன் வைத்தியமும் ஞான சூட்சம்

பாழ்போகா ரவி மேகலை எழுபத்தைந்தில்

பலம் பெற்ற சித்தர்களின் மறைப்பத் தானே!!!

பாடல் ( 2 )

 தானென்ற சித்தர்களுங் கபடாய்ப் பேசி

தரணிதன்னில் சாத்திரங்கள் சங்காசங்கம்

வானெய்ய ஒழித்துவைத்து கருவு மார்க்கம்

வழங்கிடுவேன் வெளியாக வாமம் வைத்து

ஊனென்ற வுடலாகி யுகந்துற் றுய்ய

உண்மையுடன் கற்பவகை சுண்ணமுந்தான்

பானென்ற மாதமாங் கருவின் சூட்சம்

மகிழ்ச்சியுடன் ஓதி வைத்தேன் மனுக்கள் வாழ !!!

 பாடல் ( 3 )

வாழவதி வாழைசலம் வாழைப்பூச்சாறு

வமுதரச குடத்துநீர் நாதவிந்து

சூழதிக வூசிநீர் சுத்த கெங்கை

சுரபியுடன் பனங்கள்கைத் தோடா வாழை

கூழருவி கானப்பால் குமரிப் பாலாம்

தேசிநீர் வாசிநீர் தீப்ப னிநீர்

தோஷமரும் மாதர்கருக் குடத்து நீர்க்குத்

தொகுத்தின்னம் பலநாமம் உண்டு காணே

பாடல் ( 4 )

காணவே ஐங்கோலக் கருவதென்றும்

காசினியிற் பூநீர்தான் அறியா வண்ணம்

நாணவே வானமாமலை நாதமென்றும்

நன்மையுறக் குடநீரை மறைத்துப் பேசித்

தோணவே தொல்லுலகோர் தியங்கி வாடத்

தொகுத்திட்டார் சித்தர்களும் தொகையா கத்தான்

பூணவே குடநீர்க்கே யெல்லாப் பேரும்

புகன்றிட்டார் சித்தர்கள்நான் வெளியாய்ச் சொன்னேன்

 பாடல் ( 5 )

சொல்லுவேன் ஐங்கோலக் கருவின் மார்க்கம்

சித்ததிகம் இதனாலே கோடாகோடி

பாடல் ( 6 )

இவ்வளவு அற்புதமான ஒன்றை , வாழ்வில் யாரும் காணற்கரிய ஒன்றைத்தான் மேலேயுள்ள படத்தில் GREEN LION SULPHER ( பச்சை சிங்கம் ) பார்க்கிறீர்கள்.இதன் மூலம் எல்லோரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

முதலில் முப்பூ குரு பற்றி அதிகம் எழுத வேண்டாம் என்று எண்ணியிருந்தேன் . ஏனெனில் பல ஆண்டுகள் அலைந்த பின்னர்தான் இது பற்றி எனக்கு ஒரு வாறு இது பற்றி அறிய முடிந்தது.எனவே வாசக  அன்பர்களின் வேண்டு கோளும் , ஆர்வமும் மீண்டும் ஒரு பதிவு என் ஒரு சிறந்த ரசவாதி பாகம் 2,  17 -06 -2012 அன்று வெளி வர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .