சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 1)

சர்க்கரை வியாதி என்றவுடன் அனைவருக்கும் பொதுவாக பயம் தோன்றிவிடுகிறது.இது ஏதோ குணப்படுத்த முடியாத வியாதி என்று. ஆனால் இவ்வளவு பயம் கொள்ளுமளவிற்கு சர்க்கரை வியாதி ஒரு கொடும் வியாதியா?? என்றால் இல்லை என்று நான் உறுதிபடச் சொல்வேன்.அது மட்டுமல்ல பல சர்க்கரை வியாதியஸ்தர்களை நான் குணப்படுத்தியும் இருக்கிறோம்.சிறு வயதினருக்கு வரும் சர்க்கரை வியாதியையும்   (JUVENILE  SUGAR COMPLAINT ) குணப்படுத்தலாம்.எமது அனுபவத்திலேயே இது பார்த்தது.

சர்க்கரை வியாதி என்றால் ஆங்கில மருத்துவம் என்ன கூறுகிறது . இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90 -140 வரை (நம் நாட்டு உணவுப்பழக்க வழக்கங்களுக்கு) எப்போதும் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்று கூறுகிறது . ஆனால்  இதே அளவு இரத்தத்தில் சரியாக இருந்தும் , சர்க்கரை சிறுநீரில் வெளியேறினால் அதை சர்க்கரை வியாதி என்று எடுத்துக் கொள்வதில்லை.

சித்த மருத்துவமும் அக்கு பஞ்சரும் சர்க்கரை  நோயைப் பற்றி என்ன கூறுகிறது .அதை எப்படி குணப்படுத்தலாம். ஆங்கில மருந்துகளை உட் கொண்டு வந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து நோயாளர் தப்பிப்பது இல்லையே ???ஆங்கில மருந்துகளின் துணையோடு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு , இரத்த அழுத்தம் ,இரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுவது , விளைவாக இருதயம் அதிக வேலைப்  பழுவின் காரணமாக , இதயத் தாக்குதலுக்கு உள்ளாவது , போன்ற பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன. முதலில் ஓரிரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கும் ,ஆங்கில மருந்துகள் , அடுத்தடுத்து பெருகி ஒரு டிபன் பாக்ஸ் ல் மாத்திரைகள் வைத்து சாப்பிடும் அளவிற்கு போவது ஏன்?????

முதலில் சர்க்கரை நோயைப் புரிந்து கொண்டால் இந்த நோயை குணமாக்குவதும் எளிது . முதலில் சர்க்கரை நோய் என்பது மேகங்கள் 21 றனுள் ஒன்றான மது மேகம் என்று சித்த வைத்தியத்தில் அழைக்கப்படுகிறது . மேகங்கள் வானத்தில் ஒரு இடத்தில்  நில்லாமல்  எப்படி நிலையில்லாது அலைகிறதோ அதே போல சர்க்கரை வியாதியும்  உடலில் பல இடங்களில் பல விதமான பிரச்சினையான குறி குணங்களை வெளிப்படுத்தும்.

சிறு நீரில் சர்க்கரை வெளியேறுவதால் ,சிறு நீர்ப் புற வழிகளில் கிருமித் தொற்று , ஆண்குறி , பெண்குறிகளில் அரிப்பு , மற்றும் சிவந்து போதல் , எரிச்சல் , போன்றவை உண்டாகும். கால்களில் நமைச்சல் , ஊசி வைத்து குத்துவது போல சுரீர் , சுரீர் என்ற வலிகள் , கால்களில் உணர்வு குன்றுவது ,பெரு விரல்களில் ஆறாத புண் , கால் பாதம் முழுவதும் ஆறாத ரணம் ( காங்கரீன் என்று ஆங்கில வைத்தியத்தில் அழைப்பார்கள் )  சிறு நீரக செயலிளப்பு , மண்ணீரல் கல்லீரல் கேடடைதல் , இரத்தம் சர்க்கரை போன்ற பொருட்களால் சாக்கடையாக ஆவதால் இரத்தம் கெட்டிப்பட்டு இதயம் அந்தக் கெட்டியான சாக்கடை இரத்தத்தை உடலுக்கு அனுப்ப மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது .

இதனால் இரத்தக் குழாய்கள் மூளையில் வெடிப்பதால் பக்க வாதம் வருதல் , அதீத வேலையினால் இதயத் தாக்கு (HEART ATTACK ) நேரிடுவது, கண்களில் இரத்தக் கசிவு , கண்களில் அழுத்தம் அதிகரித்தல் , குளுக்கோமா,காதுகளின் கேட்கும் திறன் பாதிக்கப்படுதல் , அதீத சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் உடல் எப்போதும் சூடாகுதல் ,அந்தச் சூட்டைத் தணிக்க உடல் சேர்த்து வைக்கும் சளியால் சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில் சளி நிறைதல் , விளைவாக முன்பக்க பின்பக்க தலைவலி கழுத்து வலி ,செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் என்னும் கழுத்து எலும்புத் தேய்வு , அதன் விளைவாக தலைச் சுற்றல், அதிக தாகம் , அதிக பசி , அதிக சிறு நீர் கழித்தல் , உடலெங்கும் சொல்ல முடியாத அளவு வலி, உடலில் எங்கு காயம் பட்டாலும் ஆறாத நிலை ,  இவை போல இன்னும் பல நேரிடும்.

நம் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோ குளோபின் , நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோகுளோபின் ஆக மாறி  மீண்டும் நம் தசையில் , உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுத்துவிட்டு  மீண்டும் ஹீமோகுளோபின் ஆக மாற வேண்டும் . ஆனால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் இந்த ஹீமோ குளோபினைச் சுற்றி சர்க்கரை ஒட்டி பிடித்துக் கொள்வதால் நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோ குளோபின் ஆக மாறுவதைத் இந்தச் சர்க்கரை தடுத்துவிடுகிறது .

எனவே இரத்தம் நுரையீரல்களுக்கு போனாலும், பிறகு  அங்கிருந்து உடலெங்கும் பரப்பப்பட்டாலும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து  எடுக்கும் , பின் உடல் அணுக்களுக்கு  கொடுக்கும் பணியைச் செய்யாமல் ஒப்புக்கு சப்பாணியாக ஓடிக் கொண்டேயிருக்கும் . விளைவு உடலெங்கும் உள்ள  செல் அணுக்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் செல்கள் சாகும் .இதனால்தான் சர்க்கரை வியாதிக் காரர்கள் உடல் மெலிந்து போவது நிகழ்கிறது . (There are a number of different human hemoglobin (Hb) variants the most prevalent being HbA1, HbS and HbC.   HbA1 is the most common variant making up approximately 97{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007} of the total hemoglobin in normal adult red blood cells.   HbS is a hemoglobin variant associated with sickle cell anemia which occurs predominantly in African Americans.   HbC is another hemoglobin variant found in people of African ancestry including African Americans and West Indians. ) 

பொதுவாக சர்க்கரை வியாதி முற்றி மோசமாக இருப்பவர்களுக்கு இந்த (HbA1 )சர்க்கரை ஒட்டிக் கொண்டுள்ள ஹீமோ குளோபின் அளவு 14 {447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007} அளவில் இருக்கும். சித்த வைத்தியத்தில் இந்த வியாதியஸ்தர்களைக் குணமாக்கும் போது 5 லிட்டர் இரத்தத்தில் 900 மில்லிகிராம் சர்க்கரை இருக்கும் .ஹீமோ குளோபினில் ஒட்டிக் கொண்டுள்ள சர்க்கரையை சித்த மருந்துகள் உரிக்கும் போது அவை இரத்தத்தில் இருப்பதாகக் காட்டும்.சித்த மருந்துகள் சாப்பிட்டேன் சர்க்கரை அளவு கூடிவிட்டது என்று எண்ணி பயப்படுவார்கள்.  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வைத்து சர்க்கரை நோயைக் கணிப்பதே தவறான முறையாகும்.

இது ஏன் என்று அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம் .அந்த விடயங்களுக்குப் போகுமுன்னர் ஆங்கில வைத்தியர்கள் உங்களிடம் கூறியுள்ள விடயங்கள் , உங்களை சர்க்கரை நோய் பற்றிய தெளிவான அறிவில்லாத முட்டாள்களாகவும்  , அதன் மூலமாக சர்க்கரை நோயாளிகளாக உங்களை வைத்திருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு .அந்த முட்டாள்தனமான  ஆங்கில வைத்திய முறை சொல்லும் பல விடயங்களை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு காலிக் கோப்பையாக வந்தால் மட்டுமே  மேலும் நாம் கூறும் விடயங்கள்  புரியும்.

இந்த தொடரைப் படித்து அதிலுள்ள சில விடயங்களைக் கடைப்பிடித்தாலேயே சர்க்கரை நோயைக்  குணமாக்கிவிடலாம்.மற்ற விடயங்களை சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2) ல் பார்க்கலாம்.