எலும்பு முறிவிற்கு முட்டைப் பற்றிடல் – பாகம் 3

எனது சித்தப்பா திரு இராமையா இரு சக்கர வாகன விபத்தில் அடிபட்டுவிட்டது. அந்தப் படங்களைப் ஏற்கெனவே பிரசுரித்திருந்தேன்.

அவர் அழிசோடைக் கருப்பசாமி (அழிஞ்சில் மரங்கள் ஓடை முழுவதும் நிறைந்திருந்ததால் அழிஞ்சிலோடைக் கருப்பசாமி கோவில் என்று பெயர் பின்னாளில் மருவி இப்படி ஆகிவிட்டது ) கோவில் பூசாரியாக இருக்கிறார்.

இந்தக் கோவில் இராஜபாளையம் அருகே 7 கிமீ தூரத்தில், காட்டுக்குள் இருக்கிறது. இரவில் காட்டு மிருகங்கள் உலவும் இடம் இது.

மேலும் எனக்கு இந்த சித்த மருத்துவத்தில் அதீத ஆர்வம் ஏற்படக் காரணம் ஆனவர் அவர் தான். மூலிகை மணி கண்ணப்பரிடம் மூலிகைப் பயிற்சி பெற்றவர்.மூலிகை மணி ஆயுள் சந்தாதாரராக சேர்ந்து பழைய மூலிகை மணி புத்தகங்களை வாங்கினார். அவற்றை பைண்டு வால்யூம்களாகச் சேர்த்து வைத்தார்.

அவற்றைப் படித்ததால் பல மூலிகைகளைப் பற்றி சிறு வயதிலேயே எனக்கு ஆர்வம் ஏற்பட்டதுடன், அவை பற்றி எனக்கு நேரடிப் பயிற்சி ஏற்படவும் காரணமானவர்.மேலும் அவர் திருக்குறள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் ,நீதி நெறி விளக்கம், நன்னெறி , விவேக சிந்தாமணி போன்ற நூல்களை சிறு வயதிலேயே மனப்பாடம் செய்து விருதுநகர் கலெக்டர் கையால் விருது பெற்றவர்.

அவருக்கு கண்ணைச் சுற்றியுள்ள இடங்களில் அடிபட்டு இருந்தது.இதனால் கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம்,காமபூரி வர்மம்,திலர்த வர்மம் (பொட்டு வர்மம் அல்லது சுடரொளியின் காலம்) , மின் வெட்டி வர்மம் (முன் வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்),மந்திரக் காலம்,  அடக்க வர்மம், நேம வர்மம், பட்சி வர்மம்,கண்ணாடி வர்மம்(மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற வர்மங்களில் வர்ம பாதிப்புக்கள் நேர்ந்திருந்த பாதிப்புகள் நீங்கிவிட்டன.அவற்றை நத்தைச் சூரி எண்ணெய் போக்கியது.அத்துடன் நேர்ந்த காயங்களை சந்தான கரணி போக்கியது.

நேற்று 08/06/2012 எடுத்த படங்கள் இதோ !!!!

முகத்தில் இருந்த காயங்கள் முழுதும் ஆறிவிட்டன

கட்டுப் பிரிக்கும் முன்

கட்டு பிரித்த பின்

முழங்கால் காயம் நன்றாக ஆறி வருகிறது.

மகிழ்ச்சியுடன் சித்தப்பா

அவர் எலும்புகள் பலமடைய பிரண்டைத் தண்டை ( வஜ்ஜிரவல்லி ) நெய்யில் வதக்கி அம்மியில்அரைத்து கருப்பட்டி சேர்த்து லேகிய பதமாய்க் கிண்டி சாப்பிடக் கொடுத்தேன்.இது உடலை வஜ்ஜிரம் (இரும்பைவிட கடினமான வஸ்து ,இந்திரனின் ஆயுதத்தின் பெயர் வஜ்ஜிராயுதம் ,அது ததீசி என்னும் முனிவரின் முதுகுத் தண்டுவடத்தால் செய்யப்பட்டது ) போலாக்குவதால் வஜ்ஜிர வல்லி என்று பெயர்.

மேலும் அடிபட்ட 24 மணி நேரத்திற்குள் ரெஸ்குயூ ரெமெடி என்ற ஹோமியோபதி மலர் மருந்தை 20 சொட்டுக்கள் தண்ணீரில் 3/4 லிட்டர் தண்ணீரில் கலக்கி 50 தடவைக்குக் குறையாமல் குலுக்கி 10 நிமிடத்துக்கு ஒரு முறை தூங்கும் வரை கொடுக்க மிக நன்றாக வேலை செய்து அடிபட்டதனால் உண்டான உடல் பாதிப்புக்களை நீக்கும்.

எல்லோரும் இது போல குணமடைய விரும்புவீர்கள் அல்லவா??? எனவே சித்த மருத்துவத்தை நாடுங்கள்.விரைவில் நலம் பெறுவீர்கள்!!!