ஒளி உருவச் சித்தர்கள் (பாகம் 4)

எனது வாழ்வில் கண்ட , காணக் கிடைக்காத அற்புத விடயங்களை நமது வலை வாசக அன்பர்களுக்காக , சித்தர்களின் பேரன்பினால் அளிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

வள்ளலார் தன் உடலை ஒளி உருவமாக ஆக்கிக் கொண்டதால் அவர் உடலின் பின் புறம் உள்ளவை எல்லாம் தெரியும் வண்ணம் ஆனது. எனவேதான் அவர் வெள்ளை உடையை உடல் முழுவதும் சுற்றி வைத்துக் கொண்டார்.அவர் நிழல் தரையில் விழாது. எனில் ஒளி ஊடுருவும் புகை வடிவமாகவே அவர் உடல் இருந்தது. அதே போல இந்தச் சித்தரும் ஒளி உருவமாக கடந்து செல்வதைப் பாருங்கள்.

இன்று வெளியிடப்படும் ஒரு ஒளிப்படக்காட்சி சித்தர்கள் ஒளி உருவமாக சதுரகிரியில் நடமாடும் ஒளிப் படக்காட்சி இதோ கீழே.அவர்கள் சந்தன மஹாலிங்கத்தையும் , சுந்தர மஹாலிங்கத்தையும் தரிசிக்க இங்கு வந்து செல்கிறார்கள். இது தந்திரக் காட்சியோ வேறு ஏதாவது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் இது பொய்யென்றும் போலி என்றும் ,கேள்விகள் கேட்ட அனுபவம் ஏற்கெனவே எனக்கு உண்டு.அவர்கள் இந்த ஒளிப்படக்காட்சியை தரவிறக்கி பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=oG0RZ9rO0AM[/tube]

சித்தர்கள் அருள் ஓங்கி நமக்கெல்லாம் கிடைக்கட்டும்.

ஓம் அகத்தீசாய நமஹ !சித்தர்கள் அனைவரையும் தலைதாழ்த்தி வணங்குகிறோம்.