அற்புத மூலிகைகளின் செயல்பாட்டு வகைகள் – பாகம் 4

சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகளை வைத்து பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.அந்த வகைகளின் பெயர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கீழே விவரிக்கிறேன்.இவற்றை வைத்துத்தான் இன்ன மூலிகை இன்ன வியாதியை குணமாக்கும் என்று தெரிந்து தெளியலாம்.

தாது ஷீணரோதி:- சரீர தாதுக்களை அழுகிப் போக வொட்டாமல் தடுக்கிற மருந்து.

நமது சரீரத்தில் சப்த தாதுக்கள் என்று உண்டு.அந்த தாதுக்கள் ரத்தம் , சதை , எலும்பு , எலும்பு மஞ்சை , நரம்பு , விந்து , நிணநீர் . இந்த தாதுக்கள் உடலில் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும். இந்த தாதுக்கள் கெட்டு அழுகிப் போவதே வியாதிகள் . தாதுக்களை நஷ்டமடைய விடக்கூடாது .எனவேதான் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்று கூறும் வழக்கு வந்தது. சப்த தாதுக்கள் கெட்ட நிலையே மேகம் . மது மேகம் என்பதும் (சர்க்கரை வியாதி என்னும் SUGAR COMPLIANT , DIABETICS MYELITIS  ) மேகங்கள் 21 க்குள் ஒன்றே .

வானத்தில் மேகம் எப்படி ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் வானம் எங்கும் அலைகிறதோ அது போல உடலின் பல பாகங்களில் உள்ள உறுப்புகளில் குறைபாட்டையோ , வலியையோ , பாதிப்பையோ ஏற்படுத்தும் . தாதுக்கள் ஷீணப்படுவதை தடுத்தால் இந்த மேகத்தையும் மேகத்தால் விளையும் வெட்டையையும் தடுக்கலாம். வெட்டை முற்றினால் கட்டை ( வேறென்ன பிணம்தான் ).

கை கால்கள் நகராமல் தடுப்பதும் இந்த வெட்டைதான் . போகம் அதிகரிப்பதால் விந்து சக்தி நஷ்டப்படுவதால் வெட்டை சூடு அதிகரிப்பதால் வரும் வியாதிகளை ARTHRITIDES , என்றும் OSTEOPOROSIS , என்றும்   OSTEOARTHRITIDES என்றும் ,  அலோபதி வைத்தியத்தில் அழைக்கப்படுகிறது . ஒரே காரணத்தால் உருவாகும் வியாதிகளை பல பெயரிட்டு அழைக்கிறது . அலோபதி வைத்தியத்தில் அடிப்படையையே அணுகாமல் மேம்போக்காக அறிகுறிகளை மட்டுமே பார்த்து வைத்தியம் பார்ப்பதால் உள்ளுறுப்புக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ,சாப்பிட்ட மருந்துகளால்தான் இந்த பாதிப்புக்கள் வந்தது என்பதே அறியாமல் அதற்கு அலோபதி வைத்தியம் பார்த்து ( மருந்து என்ற பெயரில் விஷங்களைச் சாப்பிட்டு ) வைத்தியம் பார்த்து மேலும் உடல் உள்ளுறுப்புக்கள் ( ORGANS  )   சேதமாகி முடிவில் இறந்தே போகிறார்கள்.

எனவே வெட்டையை வரவொட்டாமல் தடுக்க இந்த தாதுக்களை நஷ்டமாகாமல் காக்க, கீழ்க்கண்ட  தாது ஷீணரோதிகளான, இந்தப் பொருட்கள் சாலச் சிறந்தது.

அபயன் கடுக்காய் , அரோகிணிக்கடுக்காய் , உதிர மரத்தின் வேர் , கள்ளி மரப் பட்டை , கோடக சாலை , சிறு துத்தி , சிறு தேட் கொடுக்கு , சீமைத் தக்காளிப் பழம் , நாய்க் கடுகு , பூநிலம் , நெய்ச் சட்டிக் கீரை , பிசின் பட்டை , புங்கின் நெய் , புங்கின் விதை , வட்டக் கிலு கிலுப்பை , வாழைப் பிஞ்சு , கருங்காலி , ஏழிலைப் பாலை , தண்ணீர் விட்டான் கிழங்கு , செம்முள்ளி ,  இலவ மரப்பட்டை , புன்னை விதை , சரக் கொன்றை மரப்பட்டை , சீந்திற் கொடி , மஞ்சள் , நெல்லி வற்றல் ,  அதி மதுரம் , நீர் முள்ளி ,  சிறு குறிஞ்சான் , கடுகு ரோகணி , மலை வேம்பு , தொட்டாற் சுருங்கி , வெள்ளல்லி , கொம்புப் பாகல் , சித்திர மூலம் , மஞ்சிஷ்டி , மதன காமப் பூ , கடுக்காய் , சிறு நெருங்சில் , பேய்ப் புடல் , காட்டாத்திப் பூ , சர்க்கரை , கரு வாகைப் பட்டை ,  வெட்சிச் செடி  ஆகியன.