இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு(கல்விக்கு ஒரு உதவி)
முதலில் எனக்கு ஒரு புகைப் படக்கருவி கிடைக்க எண்ணி அதற்கான முயற்சிகள் செய்த , செய்து கொண்டிருக்கிற அன்பு உள்ளங்களுக்கு எனது இதய பூர்வமான நன்றிகள் பல.அப்படிப்பட்ட பிரதிபலன் கருதாத அன்புள்ளங்களுக்கு என் இதய பூர்வமான நன்றி.
எம்மிடம் தற்போது நிக்கான் 16.2 மெகா பிக்ஸல் காமிரா ஒரு பெயர் சொல்ல விரும்பாத அன்புள்ளம் கொண்டவரால் அளிக்கப்பட்டுள்ளது. அது நல்ல வெளிச்சத்தில் தனிப்படம் (SNAP SHOT) பிடிக்க நன்றாக இருந்தது.ஆனால் அது சென்ற 29-07-2012 அன்று எனது குருநாதர் நவலோக பூபதி என்னும் மருந்து செய்முறையை படம் பிடித்த போது ( VIDEO ) தெளிவில்லாமல் வந்தது . அதனால் எனவே நமது வலைத்தள வாசகர் திரு எம். கோபிநாத் என்பவரால் இரவலாக கொண்டு வரப்பட்ட புகைப்படக் கருவியைக் (SONY 16.2 MEGA PIXEL) கொண்டு படம் எடுக்கப்பட்டது.
குறைந்த வெளிச்சத்தில் (காட்டிற்குள் மிக இருட்டாகவே இருக்கும் ) மூலிகைகளை படம் எடுக்க சோனி நிறுவனத்தின்ஆல்பா 77 DSLR என்ற புகைப்படக்கருவி மிக நன்றாகவும் தெளிவாகவும் அதிக தூரத்தில் இருக்கும் பொருள்களை படம் எடுக்கவும் மிக நல்ல புகைப்படக் கருவி என்று எனது புகைப்படக் கலை பயின்ற நண்பர் கூறியதால் அதை வாங்கும் முயற்சியில் இருக்கிறேன் ( அதன் விலை இணைப்புப் பொருட்களுடன் 64,000 ரூபாய் ஆகும் ,அதன் தொலைலென்சு மட்டும் இது தவிர தனியாக 60,000 ஆகிறது ) . அதற்கான முயற்சியில் உள்ளேன்.
எனவே மேலும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் தயவு செய்து இனி புகைப்படக்கருவி வாங்கி யாரும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பணம் வீணாக்க வேண்டாம் ,அது எம் பணமென்றாலென்ன உங்கள் பணம் என்றால் என்ன???எல்லாம் ஒன்றுதான்.
இனி இந்தப்பதிவு சம்பந்தமான விடயங்களுக்கு வருவோம். இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு(ஏழை மாணவர்களின் கல்விக்கு ஒரு உதவி)
எமது நண்பர் திரு ஜவஹர்லால் என்பவர் எம்முடன் பணி புரிந்து சென்ற மூன்று வருடங்களுக்கு முன்னால் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு செய்த மருத்துவச் செலவுக் கடன்களை அடைக்கவே அவரது இறுதிப் பணிக்கொடையும் , தொழிலாளர் சேம நலநிதி சேமிப்பும் உதவின.
அவருடைய புதல்வர்களில் இருவர் தற்போது பள்ளிப் படிப்பில் உள்ளார்கள் .தற்போது அந்தப் பையன்களின் படிப்புக்கு பணம் கட்ட முடியாத, வழியில்லாத நிலையில் உள்ளார்கள். ’’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலின் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது என்பது முன்னோர் வாக்கு.’’ அதற்கிணங்க பண உதவி புரிய எண்ணும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கு எண்ணுக்கு தங்களால் இயன்ற பணம் உதவி செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்ளுகிறேன்.
மூத்த பையன் செல்வன் ஜ.பரத்ராஜ் தற்போது மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் மக்கள் தொடர்புக்கலை இளங்கலை ( Bsc I.T ) இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.அவருக்கு இந்த வருடத்துக்கான SPECIAL FEES (Third semester)முதற்கட்டமாக ரூபாய் 12,500ம் SPECIAL FEES (Fourth semester) இரண்டாம் கட்டமாக 7,500 ம் கட்ட வேண்டும்.
செல்வன் ஜ.பரத்ராஜ் ன் ஸ்டேட் பாங்க் ( S.B.I ) கணக்கு எண் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். அது அவரது தந்தை இறந்த பின் அளிக்கப்படும் உதவித் தொகைக்கான வங்கிக் கணக்கு விவரம்.அந்தத் தொகை மிக சொற்பமான தொகையாக ரூபாய் 505/ மட்டுமே.அதுவும் இவர் மேஜர் ஆகிவிட்டதால் ஆறு மாதமாக கணக்கில் வரவில்லை.இவரது கணக்கு விவரங்கள்
S.B A/C NO:- 30830518060
Tamil Nadu
District :
Madurai State Bank Of India
Branch :
Tallakulam
IFSC Code :
SBIN0000253(5th character is zero)
MICR Code :
Branch Code :
000253(Last 6 Characters of the IFSC Code)
City :
Madurai
Address :
60 Alagar Koil Road, Distt. Madurai, Tamil Nadu 625002
Contact :
IP:804401, 0452- 2530764, 2528606
இரண்டாவது பையன் செல்வன் ஜ. ஜகத்ராஜ் தற்போது செவன் டே அன்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான்.இந்தப் பையனுக்கு இந்த வருடம் கட்ட வேண்டிய தொகை SPECIAL FEES ( FIRST TERM FEES ) ரூபாய் 15,000 கட்ட வேண்டி உள்ளது . இந்த ஒரு முறை உதவினாலே போதும், இந்த இரு பையன்களின் படிப்பு தொடர்ந்து நடந்து முடிந்துவிடும்.
செல்வன் ஜ.ஜெகத்ராஜ் ன் ஸ்டேட் பாங்க் ( S.B.I ) கணக்கு எண் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். அது அவரது தந்தை இறந்த பின் அளிக்கப்படும் உதவித் தொகைக்கான வங்கிக் கணக்கு விவரம்.அந்தத் தொகை மிக சொற்பமான தொகையாக ரூபாய் 505/ மட்டுமே.
S.B A/C NO:- 30830517168
Tamil Nadu
District :
Madurai State Bank Of India
Branch :
Tallakulam
IFSC Code :
SBIN0000253(5th character is zero)
MICR Code :
Branch Code :
000253(Last 6 Characters of the IFSC Code)
City :
Madurai
Address :
60 Alagar Koil Road, Distt. Madurai, Tamil Nadu 625002
Contact :
IP:804401, 0452- 2530764, 2528606
நமது வலைத் தள அன்பர்களில் சிலருக்கு எமது அலைபேசி எண்ணைத் தருவதுண்டு.அவர்கள் எமது அலைபேசியில் வலைத்தள அன்பர்கள் வரும்போது எம்மிடம் ஐயா , சித்த மருத்துவம் செய்யும் போது அதற்கு பணம் வாங்காவிட்டால் பலிதமாகாது என்று கூறும்போது , நாம் பசி என்று வருபவர்களுக்கு சாப்பாடு போடுங்கள் , இதுதான் எமக்குத் தரும் தட்சணை என்று கூறுவேன்.ஏனென்றால் செய்த பாவங்களை தீர்க்க அன்னதானமே சிறந்த வழி ,அதை விடச் சிறந்த வழி ஆயிரம் அன்னதானச் சந்திரங்களை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு சோறிடுவதைவிட ஒரு ஏழைக்கு படிப்புச் செலவுக்கு உதவி செய்தல் மிக்க சிறப்புடையது.
அவர்களுக்கு இது வரை படிப்புச் செலவிற்காக நம்மால் ரூபாய் 90,000 வரை உதவி செய்துள்ளோம். இந்த வருடம் எம்மால் எந்த பண உதவியும் செய்ய இயலாத நிலையில் உள்ளதால் , நம் வலைத் தள அன்பர்களுக்கு இந்த வாய்ப்பை தருகிறேன். இதை வாய்ப்பு என்று ஏன் சொல்கிறேன் என்றால் பாவம் தொலைய நாமும் ஏதாவது தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டும் .அத்தகைய தர்ம காரியமே இது . எனவேதான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Guruji,
Ramarukku Anilin savai pola nangalum ungal sevail pangu
Eduthu kolkerom.
Ungalin Anbu ullathirkku nandri.
Anbudan,
Vanavil.
அன்பு மிக்க திரு எம் கோபி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நாம் செய்யும் அத்தனை நற்காரியங்களும் ,சுழற்றிவிட்ட சக்கரம் போல பல மடங்கு அதிகமாக பெருகி நமக்கே பல நற்காரியங்களாகத் திரும்பி வரும்.இதே போலத்தான் நாம் செய்யும் தீங்கும்.இதை கர்ம யோகம் என்று பாகத்தில் கீதாசாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.எனவே
நல்லாரைக் காண்பதுவும் நன்றே !!!
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே!!!
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே !!!
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே!!!
நல்லதை செய்ய என்ற மூதுரைப்பாடல் தெளிவாக்குகிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்,
நான் கடந்த ஒரு வாரமாக நினைத்து கொண்டிருப்தேன். இந்த நாட்டில் வந்த பிறகு, ஒரு தடவை படிப்பதற்கு யாராவது கஷ்டப் பட்டால் உதவி செய்யலாம் என்று.
அவர்கள் இருவருக்கும் உதவி செய்கிறேன்.
அன்பு மிக்க திரு பரமசிவம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நாம் செய்யும் அத்தனை நற்காரியங்களும் ,சுழற்றிவிட்ட சக்கரம் போல பல மடங்கு அதிகமாக பெருகி நமக்கே பல நற்காரியங்களாகத் திரும்பி வரும்.இதே போலத்தான் நாம் செய்யும் தீங்கும்.இதையே கணியன் பூங்குன்றனாரின் பாடல் தெளிவாக்குகிறது.
“”யாதும் ஊரே யாவரும் கேளிர்!!(எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்)
தீதும் நன்றும் பிறர் தர வாரா!!(தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை.நமக்கு நாமே செய்து கொள்வதுதான்.நாம் செய்த நல்லது பலமடங்காகி நம்மை நாடி வரும்.நாம் செய்த தீமையும் பலமடங்காகி நம்மை நாடி வரும்)
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன!!(துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்)
சாதலும் புதுவது அன்றே!!(செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை)
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!!(வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை)
முனிவின் இன்னாது என்றலும் இலமே!!(இல்லறத் தடம் மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;)
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது!!(வானம், மின்னல் வெட்டி மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,)
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று!!(கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,)
நீர்வழிப் படூஉம் புனை போல்!!(அதன் தடத்திலே போகும் புனையைப் {மிதவை (அல்லது) சிறு படகு} போல, அரிய நமது உயிரியக்கம் ஆனது)
ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்(முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.)
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்(அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், {இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்ற யோகி ஆனோம் ஆகையால்})
பெரியோரை வியத்தலும் இலமே!(பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை;{அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்})
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!(சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை.{நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்})””
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://iravuvaanam.blogspot.com/2011/05/blog-post_31.html
அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
எப்படி அவ்வப்போது இது போன்ற அவசியமான விடயங்களை சமய சந்தர்ப்பங்களில், தெரிவிக்கின்றீர்கள்.படிக்கும் மிக ஏழை மாணவர்களுக்கு அவசியமான தகவல்.இதற்காக ராமராஜ் கம்பெனி முதலாளிக்கும், அவரது செயலாளருக்கும் நன்றி தெரிவிக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம்.///நாம் செய்யும் அத்தனை நற்காரியங்களும் ,சுழற்றிவிட்ட
சக்கரம் போல பல மடங்கு அதிகமாக பெருகி நமக்கே பல
நற்காரியங்களாகத் திரும்பி வரும்/// மிகவும் அற்புதமான விளக்கம்
எனக்கும் உதவி செய்ய ஆசைதான்.மனமிருக்கும் மனிதரிடம் பணம்
இருப்பதில்லை/பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
ராம்ராஜ் போல சில புண்ணிய ஆத்மாக்களும் விதிவிலக்காக
இருகின்றனர்.நற்பவி அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி என்ற K.சீனிவாசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
கீழுள்ள அலை பேசி எண்ணும் , முகவரியும் உங்களுடையதுதானா???? இல்லையா?? என்று மட்டும் தெரிவியுங்கள்.பிறகு என் கருத்துரையை இடுகிறேன்.
978972004639, Sri Balaji Complex, 7th Street Extension, Gandhipuram, Coimbatore- 641 012, Tamil Nadu, India
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
“பிறருக்கு கொடுக்கும் ஒருவன் அதை தனக்கு தானே கொடுத்துக்கொள்கிறான் ”
என்பது ரமண மகரிஷி வாக்காகும்
.நற்பவி அன்புடன் ஹரி
அன்புள்ள ஹரி என்ற சின்னா என்ற K.சீனிவாசன் அவர்களே,
ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்தே ஏன் இத்தனை கருத்துரைகள். உங்களுக்கு வேண்டியது என்ன என்று கேட்பதில் ஏன் இத்தனை ஒளிவு , மறைவு. நீங்கள் பேசுவது உண்மையாக இருந்தால் பேசுவதெல்லாம் உண்மை ஆகும். மாறாக பொய் முகமூடிகள் அணிந்து என்னிடம் வந்தால் பயன் என்ன???எந்த நோக்கத்தில் இதை செய்திருந்தாலும் இனி இதை தவிருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி,
வணக்கம்.எனது பெயர் சீனிவாசன் தான்.சிறு வயதிலும் தற்போதும்
பட்டப்பெயரில் சின்னா,ஹரி என்று நண்பர்கள்/உறவினர்கள் கூப்பிட்டு
அதுவே இப்போது எல்லோருக்கும் தெரிந்ததாக உள்ளது.முகவரி போன்
எல்லாம் சரியே.ஆர்வ கோளாறில் பலதடவைகள் பல கேள்விகள் கேட்பதில்
எனக்கும் சங்கடம்தான்.இனி ஹரி என்ற என் தெரிந்த பெயரில் மட்டும்
நான் எழுதுவேன்.தங்கள் ப்ளாக் இல் மட்டும் தான் நான் பின்னுட்டம்
இடுகிறேன்.இதில் மறைக்க வேண்டியது ஏதும் இல்லை.தவறுக்கு
மன்னிக்கவேண்டுகிறேன் .நன்றி என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நீங்கள் ஆர்வக் கோளாறில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் எமக்குச் சங்கடமில்லை.உங்களுக்கு நான் கேட்டதற்கு மனச்சங்கடம் ஏற்பட்டிருந்தால் பொறுத்தருள்க!!!!நீங்கள் குறிப்பிட்டபடி நீங்கள் எழுதிய இன்னொரு கருத்துரையை நீக்கிவிட்டேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்