முஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு ( பாகம் 2 )

எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.

இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு இப்போது வந்திருக்கும் ராஜயோக திருலத்திரு மஹ்தூம் பாவா பக்ருதீன் அவர்களின்  நினைவு சந்தன மலரஞ்சலி சமர்ப்பண விழாவுக்காகவும்/ஜடச்சித்தர்    ’’இ’’ அவர்களின் நூல் வெளியீட்டு விழா அனுப்பப்பட்ட அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.மேற்படி அழைப்பை உங்கள் எல்லோருக்குமான அழைப்பாக இங்கே வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
முஸ்லீம் அன்பர்கள் குர்ரான் என்ன சொல்லியுள்ளது என்பதை தெளிவாக பாவாவிடம் அறிந்து கொண்டு பிறவிப்பயன் அடைந்து ஞானத்தில் திளையுங்கள்.ஜடச்சித்தர்    ’’இ’’ அவர்களின் இந்த ஆன்மீக நூலிலும் பல ஞான ரகசியங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன. இது முஸ்லீம் அன்பர்களுக்கு எனது ரமலான் நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்புப் பரிசு.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!!
பிஸ்மில்லாஹிர்ரஹிமான் ஹிர்ரஹீம்.இந்த பிஸ்மில் குறத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.இறைவன் கலீமாவாக இருக்கிறான்.அந்தக் கலீமாவைத் தெரிந்து கொள்ள ராஜ கம்பீரம் பாவாவிடம் வாருங்கள்.