முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 1

முப்பூ குரு பற்றி யாரும் பேசவே அஞ்சுவர்.இது சித்தர்கள் சொத்து என்றும் இது பற்றி சொல்லக் கூடாதென்றும் , பேசக் கூடாதென்றும் பலர்  ( கிருஷ்ண கிரி சுப்ரமணியம் , மனோகரன் சாமீ , தாணிப்பாறை ) என்னை அச்சுறுத்தினர்.எனக்கும் பல சோதனைகள் வந்தன. ஆனால் எம் குருநாதர் திரு மிகு வெங்கடாசலம் ஐயா அவர்கள் அருட்கருணையாலும் , சித்தர்கள் அருட்கருணையாலும் முப்பு பற்றி இத்தனை கட்டுரைகள் வந்துள்ளன.

பஞ்ச மூத்திரம் என்று பஞ்ச பூதக் கலவைகளைச் சொல்வதாலும் பலர் மனித மூத்திரத்தையும் ,ஆட்டமுரி (ஆட்டின் மூத்திரம் ) ,கோமூத்திரம் (மாட்டின் மூத்திரம் ) , கழுதை மூத்திரம்  ( கேசரியின் மூத்திரம்  { இதை சிங்கத்தின் மூத்திரம் என்றும் பொருள் கொள்வார்கள் } ) , இப்படி பல விதமான மூத்திரக் கலவைகளை ஆராய்ச்சி செய்வார்களும் உள்ளனர்.

இவர்களுக்காகவே நீதியரசர் திரு பலராமையா அவர்களின் நூலில் இருந்து சில பக்கங்களை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

முதலில் அவர் கூறிய மூத்திரம் என்பது இதுவல்ல என்பதற்கான  விடயங்களை மட்டும் தரலாம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அவர் அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் முகவுரை பற்றிக் குறிப்பிட்டு  இருப்பதால் , முகவுரைப் பக்கங்களியும் சேர்த்து வெளியிடுகிறோம்.

 நன்றிமுப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்

பதிவு மிகப் பெரியதாகப் போவதால் முத்திரவியம் இரண்டு பாகங்களாக வெளிவருகின்றது .