நீரோட்டம் பார்க்கும் கருவி

நான் வசிக்கும் ராஜபாளையத்தின் அருகே உள்ள முறம்பு என்ற இடத்தில் என்னுடன் பணிபுரியும் திரு குணபால் ஜெயவீரன் என்பவரின் மாமா திரு பால் வாசன் அவர்கள் நீரோட்டம்( WATER DEVINING ) பார்ப்பதில் விற்பன்னராக இருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரை சந்திக்க சென்றேன். எனது வீட்டிற்கு ஆழ்துளைக் குழாய்க் கிணறு தோண்டுவதற்காக நீரோட்டம் பார்த்துக் கொடுக்க வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.
அவரும் நீரோட்டம் பார்த்துக் கொடுக்க ஒப்புக் கொண்டு வீட்டிற்கு வந்தார் அவர் வைத்திருந்த நீரோட்டம் பார்க்கும் கருவி ஒரு பத்து விளக்குமாற்றுக் குச்சிகளை ஒன்றாகக் கட்டிய ஒரு சிறு விளக்குமாறு போல் இருந்தது. படம் (1)ல் காண்க!அது செவ்விளநீர் தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட குச்சிகளைத் தொகுத்துக் கட்டப்பட்டவை.
   
படம்1
அவர் அதில் கைக்கு ஐந்து குச்சிகளாக பிடித்துக் கொண்டு(தோராயமாக) என் மனைக்குள் நடந்தார். அவர் கையில் அந்தக் குச்சி சுழல்வதையும் அது எதிர்த்து’ டப் ‘ என்று அவர் மேல் அடிப்பதையும் கண்டு எனக்கு ஆச்சரியம் ஆனது.இந்தக் குச்சிகளை நீங்கள் சுழற்றுகிறீர்களா அதுவாக சுழல்கிறதா என்றேன்?அவர் உடனே அவரது இடது கையை என் வலது கையுடன் கோர்த்தார்.என் இடது கையில் குச்சியைக் கொடுத்துவிட்டு அவரது வலது கையில் மீதி குச்சியை பிடித்துக் கொண்டார்.என்ன ஆச்சரியம் என் கையில் உள்ள பாதிக் குச்சிகள் என் கையை மீறி சுற்றியது . எனக்கு ஆச்சரியம் ,இது போல் என் கையில் சுற்ற என்ன செய்ய வேண்டும் என்றேன்.(என் உடலின் உயிர்ச் சக்தியும் அவருடைய உடலின் உயிர்ச் சக்தியும் இணைத்து இதை நிகழ்த்தினார்.)

அதற்கு அவர் சொன்னார் 48 நாட்களுக்கு குறையாமல் தினமும் முளைக் கட்டிய பாசிப் பயறு சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றார்.அதன் பிறகு அவ்வாறே செய்து அந்த அற்புத சக்தியைப் பெற்றேன்.இது பற்றிப் பிறகு ஒரு பதிவு நிச்சயம் உண்டு.அது பற்றி வெளியாக வேண்டும் என்றால் அது உங்கள் கையில்!பின்னூட்டம் இல்லை என்றால் இது பற்றிய தகவல்களை வெளியிட மாட்டேன். ஏன் என்றால் இது உங்களுக்கு பிடிக்காதில்லையா?

கொஞ்சமாவது உங்கள் தேவை என்ன, நீங்கள் படிக்கின்றீர்களா? என்பது எனக்கு தெரிய வேண்டாமா?தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள் இல்லாவிட்டால் ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று கூறி கடையை ஏறக் கட்டிவிட வேண்டியதுதான்!அதுவும் உங்கள் கையில் !