சுதந்திர தின இனிய உதயம்(மச்ச முனி மூலிகையகம்) {பாகம் 1} நீதியரசர் பலராமையா அவர்களின் மின்சாரத் தைலம்

natural

மச்ச முனி வலைத் தள அன்பர்களுக்கு சுதந்திர தின இனிய நல் வாழத்துக்கள்.மச்ச முனி வலைத் தள அன்பர்களுக்காக ஒரு இனிய நற்செய்தி . திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்கள் அருமையான இயற்கை மருத்துவ கலவைகளைக் கொடுத்து வருகிறார்.இயற்கையாக மலைப் பகுதிகளில் கிடைக்கும் பல விடயங்கள் அவரிடம் மட்டுமே கிடைக்கும்.

ஆனால்  எல்லா மச்ச முனி வலைத் தள அன்பர்கள் மற்றும் , வாசகர்களின் தேவையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் , பலர் எம்மிடம் தொடர்பு கொண்டு வருவதால் அனைவருக்கும் பல மருந்துகள் தேவைப்படுவதால் ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .

எனவே தன்னலம் கருதாத எம் நண்பர்களில் ஒருவரான திரு அமீர் சுல்தான் அவர்களை தேர்வு செய்து இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். அவர் இது போன்ற பொதுச் சேவையை செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டு தம்மால் அயல் நாட்டில் தாம் சுயமாய் சம்பாதித்த பொருளை வைத்து மருந்துகள் செய்து , இங்கு பலருக்கு  கொடுத்து பலருக்கு நோய்கள் குணமாவதைக் கண்டு மகிழ்ந்தவர் ,மகிழ்பவர் இவர் .

இவருக்கு மேற்பார்வைக்காக உதவி செய்ய பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருந்தாளுநர் ஒருவரும் உதவி செய்கிறார்.இது போக பல அற்புதமான விடயங்களை செய்வதற்கும் சில மருந்துக் கலவைகளைகச் செய்வதற்கும் பல பரம்பரை வைத்தியர்களான ப்ரதீப் ,சென்னை போன்ற சித்த மருத்துவர்களின் உதவியும் உள்ளது.

இதனால் தரமான நல்ல மருந்துகள் ஒரு சிலவற்றை இவர்கள் மூலம் கிடைக்கச் செய்யலாம் என்ற பரந்த நோக்கத்துடன் (வியாபார நோக்கமில்லாமல் ) இந்தக் கட்டுரை வெளி வருகிறது.எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி பயனுறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நீதியரசர் பலராமையா அவர்களின் முறையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத் தைலம்:- 

சித்தர் மின்சார தைலம்

மென்தால்

தைமால்

கற்பூரம்

பச்சை கற்பூரம்

சோடா உப்பு

தீரும் நோய்கள்:ஒரிரு சொட்டுக்கள் வெற்றிலையில் தடவி இருமலுக்கு உபயோகிக்கலாம்.மூட்டு மற்றும் முதுகு வலிக்கும், தசை வலிகளுக்கும் மேல் பூச்சாக உபயோகிக்கலாம். பல் வலிக்கு பிரஷ்ஷில் ஓரிரு சொட்டுக்கள் விட்டுத் தேய்க்க குணமாகும்.பல் பொடி எதுவானாலும் 100 கிராமுக்கு அதனுடன் பத்து சொட்டுக்கள் கலந்து உபயோகிக்க பல் வலி , பல்லரணை , ஈறு வீக்கம் , பல்லாட்டம் வராது பார்த்துக் கொள்வதோடு பல் விழாமலும் ,பற்கள் ஆடாமலும் நலம் பயக்கும்.

தேள்கடிக்கு ஒரு துளி விட்டாலே விஷம் நீங்கும்.
உள் பிரயோகமாக இரண்டு துளிகளை , வெந்நீரில் அல்லது வெற்றிலையில் கலந்து, ஒரு வேளை தேவைப்படும்போது மட்டும் கொடுக்க, மார்பு எரிச்சல், வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, இரைப்பிருமல் கட்டுப்படும்.
ஆதாரம்: சித்த மருத்துவர் கையேடு(தமிழ் மருத்துவக் கழக வெளியீடு) பக்கம்-130.

இந்த மருந்துகளுக்கு நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953