ஒளியுடல்

valallarorg-pic

வள்ளலாரின் திருவடி போற்றி இந்தப் பதிவை எழுதுகிறோம்.பலர் ஞானம் பெறுவதிலும் , கற்பங்கள் சாப்பிடுவதிலும் உங்கள் அனுபவங்களை விவரியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது . எனவே இதை வேறு விதக் கண்ணோட்டத்துடன் (நீங்கள் இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டீர்களா ? என்று ) எம்மைப் பார்த்து கேள்விகள் கேட்க வேண்டாம் ?? எனக் கேட்டுக் கொள்கிறோம்.

நாம் உம்மிலும் மிகச் சிறியவனினிலும் மிகச் சிறியவனே???எம்மை இந்த அளவில் வைத்த இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்.இந்த நிலையை அடைந்ததனால் மனம் மிக வெறுமை அடைந்து வருகிறது . இனி எவ்வளவு காலம் எம்மால் உங்களுடன் இந்த வலைத் தளத் தொடர்பிலும் , உலகத் தொடர்பிலும்  இருக்க இயலும் என்பதும் தெரியவில்லை???

மச்ச முனிவரின் சித்த ஞான சபையின் உபதேசத்தை 21 வயதில் பெற்று , அதைக் கடைப்பிடித்து வந்ததன் மூலமும்  , எம் குருநாதர் அருள்மிகு  தவத்திரு பார்த்த சாரதி அவர்களின் அருளாசியாலும் சில விடயங்களை அடைந்ததன் மூலமும்,அந்த வழியைக் கடைப் பிடித்துக் கொண்டே  பல கற்பங்களை உண்டதாலும் ,பல ஞானிகள் யோகிகள் , சித்தர்களின் நல்லாசியாலும் நமது உடல் பக்குவப்பட்டு வருகிறது.அதன் விளைவால் எமது உடல் ஒளி ஊடுருவும் தன்மை பெறுவதால் உடலின் நிழல் , தன் கருமையை  குறைத்து வருகிறது.

அதாவது ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள் . ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்தான் இருக்கிறது.அதாவது உயிர் உடலை விட்டுப் போகும்போதே , ஆகாயக் கூறு பழுதுபட்டுச் சென்று விடுகிடுறது.அடுத்து வாசித்துக் கொண்டிருக்கும் காற்று உடலைவிட்டு ஓடிவிடுகிறது .காற்றில்லாவிட்டால் நெருப்பேது .நெருப்பும் அணைந்தேவிடுகிறது. ஆக பழுதுள்ள மூன்று பூதங்களும் ஓடிவிட பழுதில்லாத இரண்டு பூதங்களும் ( மண்ணும் , நீரும் ) பிணமாகக் கிடக்கின்றன.

ஒளியை மறைக்கக் கூடியவை இந்த மண்ணும் நீரும்தான்.ஆகாயமோ , காற்றோ, நெருப்போ ஒளியை மறைப்பதில்லை.ஆகாயம்தான் இயற்கையி அதிகமாக இருந்து இந்த உலகம் முதலான அனைத்து பூதங்களையும் தாங்குகின்றது.அதே சமயத்தில் கனமில்லாததாகவும் , வலிமையானதாகவும் இருக்கின்றது.அந்த ஆகாயக் கூற்றை உடலில் அதிகரித்தால் உடல் ஒளி ஊடுருவக் கூடியதாகிறது.உடல் அழியாத தன்மையையும் அடைகிறது.

கீழுள்ள படங்களில் இருந்து இதனை தெளிவாக காணலாம்.எமது நிழல் எமது நண்பரின் நிழலைவிட கருமை குறைந்து காணப்படுவதைக் காணலாம்.

OLIYUDAL 2_mini

OLIYUDAL 4_mini

OLIYUDAL  5_mini

மேலும் கீழுள்ள  காணொளிக் காட்சியையும் காணுங்கள்.

வள்ளலார் முழு ஒளியுடல் பெற்றதால் அவர் உடல் ஒளி ஊடுருவும் தன்மை பெற்றதால் அவருக்கு நிழல் விழுவதும் இல்லை. அவர் உடலின் மறு பக்கம் உள்ளவை தெரியும் என்பதால் அவர் உடல் முழுவதும் வெள்ளுடையை சுற்றிக் கொண்டு நடமாடினார்.அவர் நிலையை அடைய எத்தனை பிறவிகள் தேவைப்படுமோ ??? எத்தனை பிறவிகள் தவமியற்ற வேண்டுமோ ???யாமறியோம் பராபரமே???

மின்சார ஒளியில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் மேலே உள்ளது , சூரிய ஒளியில் எடுக்கப்பட்ட காட்சிகளை விரைவில் நம் தளத்தில் வெளியிடுகிறோம்.