சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 10 )

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 9) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

naval

ஜீரண சக்திக்  குறைபாடே சர்க்கரை வியாதி முதல் பல வியாதிகளுக்குக் காரணம் என்று முன்னரே பல பதிவுகளில் நாம் கூறியுள்ளோம்.அந்த ஜீரண சக்திக்  குறைபாட்டை  நீக்கவும் தவிர்க்கவும் பல வழிகளை இனி விவரிக்கின்றோம்.

முதலில் சாப்பிட்ட பின்னர் அரை மணி நேரம் கழித்து இலேசான இளஞ் சூடான வெந்நீர் சப்பிச் சாப்பிடுவதன் மூலம் ஜீரண சக்திக்  குறைபாட்டை சிறிது சிறிதாக சரியாக்கலாம் . சோம்புக்  குடிநீரும் , சுக்குக் குடி நீரும் அருந்தி வர ஜடராக்கினி தூண்டப்பட்டு வயிற்றில் போடும் உணவு மிகச் சிறந்த அன்ன ரசமாக மாற்றப்பட்டு , உடலில் தேவையான சப்த தாதுக்களில் எதுவாக மாற்றப்பட வேண்டுமோ அதுவாக மாற்றப் பெறுகிறது . விளைவாக உடல் விரைவில் எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு வலுப் பெறுகிறது .

நாவல் மரப்பட்டை

ஆசியநோய் காச மசிர்க்கரஞ்சு வாசவினை

கேசமுறு பால கிரகநோய் –  பேசரிய

மாவியங்க லாஞ்சனமிவ் வன்பிணி எலாமேகு

நாவலுரு பட்டையத னால்

-( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:- நாவல் மரப்பட்டையினால் வாயிற் பிறக்கும் நோய்கள் , இருமல் , பெரும்பாடு ( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர  விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது  ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) , ஈளை , பிள்ளைகளின் கிரக தோஷங்கள் , வியங்கம் , வாஞ்சனம் என்ற மச்ச பேதங்கள் ஆகிய இவைகள் தீரும் .

செய்கை:- சங்கோசனகாரி

உபயோகிக்கும் முறை:-நாவல் மரப்பட்டையைச் சூரணம் செய்து 1/2 தோலா எடை{அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)} ,வீசம்படிகருங்குறுவை அரிசி மாவுடன் கூட்டிச் சலம் விட்டுப் பிசைந்து  ஆடை போலாவது அல்லது ஏடு  கட்டிப் பிட்டவியலாவது சர்க்கரை , நெய் கூட்டிச் சாப்பிடப் பெரும்பாடு , ரத்தக் கழிச்சல் , ரத்தக் கழிச்சல் , சீதபேதி , முதலியவைகள் போம் . பட்டையை கியாழம் வைத்துக் வாய் கொப்புளிக்க வாய் ரணம் , தொண்டைப் புண் முதலியவைகள் ஆறும் . இதன்  சூரணத்தை ரத்தம் சொரிகின்ற புண்களின் மேற்றூவ , இரத்தத்தை வறட்டி ஆறச் செய்யும் .

நாவல் மரத்தின் வேர்

வாத மறுங்கரப்பான் மாறும் விரணமோ

டோதமுறு நீரழிவு முத்துரத்த – சீதமுங்காய்

மாவன் சுரமும் வளர்மேக மும்போகும்

நாவன் மரவேரி னால்

-( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:- நாவல் மர வேரினால்வாத விகாரம் , கரப்பான் புண் , வெகு மூத்திரம் , ரத்த சீத பேதி , வாதசுரம் , மச்சைமேகம் இவைகள் விலகும் .

செய்கை:- சங்கோசனகாரி

உபயோகிக்கும் முறை:-நாவல் மரப்பட்டைக்குக் கூறியுள்ள அனைத்து உபயோகங்களும் இதற்குமாகும் .

உங்களுக்கு நாவல் மரத்தின் சிறப்பைச் சொல்ல வேண்டிய விடயங்கள்  நிறைய உள்ளன .முருகன் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து நாவல் மரத்தின் மேல் உட்கார்ந்தது கொண்டுதான் சுட்ட பழம் வேண்டுமா ?? சுடாத பழம் வேண்டுமா ?? என்று கேட்டார்.அதற்கு ஔவை பழம் கூட சுடுமா அப்பா என்று கேட்டார் ?? சுடாத பழமாக பார்த்து போடு என்று கூறினார்.

முருகன் நாவல் மரத்தை உலுக்கிய பின்னர் , ஔவை கீழே விழுந்த நாவல் பழத்தை நன்கு பழுத்த நாவல் பழமாக எடுத்து பழத்தில் ஒட்டியிருந்த மண்ணை ஊத ,அப்போது முருகன் என்ன பாட்டி  சுடாத பழமாக கேட்டுவிட்டு சுட்ட பழத்தை எடுத்து ஊதுகிறாயே ?? என்று கேட்டார். நன்கு பழுத்த பழத்தில் மண் ஒட்டுவதால் மண்ணைப் போக்க ஊதிச் சாப்பிடுவதால்  நாவல் பழத்தில் சுட்ட பழம் என்பது நன்கு பழுத்த பழம் என்பதும் , சுடாத பழம்  என்பது நன்கு பழுக்காத பழம் என்பதும் அப்போதுதான் ஔவைக்கு புரிந்தது .

“கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாரி , இருங்கதலித் தண்டுதனக்கு  நாணும்” எனக் கூறினார் அதாவது கருங்காலிக் கட்டையை பொடிப்பொடியாக வெட்டும் இரும்புக் கோடாரி வாழை மரத்தை வெட்ட முடியாது வழுக்கிக் கொண்டு வெட்கப்படும் என்று பொருள்  .ஔவை இது வரை நான்தான் தமிழில் வித்தகி என்று எண்ணி இருந்த ஆணவம் எல்லாம் தொலைந்தேன் என்று முருகனை வணங்கி சென்றார் .

வெண்ணாவல் மரம்

VENNAAVAL_mini

மேலே கொடுத்துள்ளது கோரக்கர் மலை வாகடத்திலிருந்து உள்ள குறிப்புக்களை கொடுத்துள்ளோம்.

சதுரகிரியில் சுந்தர மகாலிங்கத்திற்கு செல்லும் வழியில் சின்ன பசுக்கிடைக்கு கடந்த பின்னர் நவ்வலூற்று  ஒன்று இருக்கிறது .செல்லும் பாதையின் அருகிலேயே வெண் நாவல் மரம் ஒன்றுள்ளது. அதனடியில் ஊரும்  தண்ணீர்  சர்க்கரை நோயை குணமாக்கும் வல்லமை உள்ளது.வெண்ணாவல் சத்து அதில் சேர்வதால்தான் இந்தத் தன்மை அதற்கு உள்ளது .

கீழே உள்ள இணைப்பில் இது விவரிக்கப்பட்டுள்ளதை  காணுங்கள் .

http://www.siththarkal.com/2011/01/blog-post_955.html

மேலும் வெண்ணாவல் ( சாதாரண நாவல் மரத்திலிருந்தும் )மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை குடிநீர்க் குவளை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகைப் பொருள் . இது ஆயுர்வேதிக் டம்ளர் என்ற பெயரில் சில கடைகளில் கிடைக்கிறது.

அது நமது அமீர் சுல்த்தான் , மச்ச முனி மூலிகையத்திலும் கிடைக்கிறது.வெண்ணாவல் மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை குடிநீர்க் குவளை கற்பமாக ( உயிரை அழிய விடாமல் செய்யும் தன்மையுடையது )செயல்படும் சிறப்புடையது , என்றாலும் சாதாரண நாவல் மரத்திலிருந்து தயாரிக்கப்படும்  மூலிகை குடிநீர்க் குவளையும் மேலே குறிப்பிட்ட நோய்களைப் போக்குவதில் மட்டும் இத்தகைய சிறப்புக்களை உடையது .

இந்த மச்சமுனி சிறப்பு மது மேகச் சூரணத்துக்கும் , மூலிகை குடிநீர்க் குவளைக்கும்  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

 

MOOLAIKAI KUVAlAI_miniஇந்தக் குவளையில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து தண்ணீர் சிறிது  நிறம் மாறும் , அதைக்  குடிக்க உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.உடல் வளம் பெரும். உடலில் உள்ள சர்க்கரை நோய் , உயர் இரத்த அழுத்தம் , அதீத உடல் சூடு , அந்தச் சூட்டால் விளையும் வெள்ளை , வெட்டை , மேக காங்கை ( உடல் எரிவு ), சர்க்கரை நோயால் வரும் கை கால் எரிவு , கண் புகைச்சல் போன்றவை தீரும்.

திருவேங்கடம் என்னும் ஊரிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் கழுகுமலை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது .அந்தக் கோவிலருகே உள்ள குளத்தில் மலையில் இயற்கையாக உள்ள அப்பிரேகம்  கரைந்துள்ளது . இந்தக் குளத்து நீரை அருந்தி வந்தாலும் சர்க்கரை நோய் குணமாகும் .நமது முன்னோர்கள் இது போன்ற ஆரோக்கிய விடயங்களை கோயில்களில் வைத்து பொது மக்களின் ஆரோக்கியத்தை நிலை நாட்டியுள்ளனர் .நாம் பாதுகாக்கப்பட்ட குடி நீர் என்ற பெயரில் இவற்றையும் தொலைத்துவிட்டோம்.

கழுகு மலைக்  கோயிலின் படங்களையும் , கழுகு மலைக் கோயில் குளத்தையும் கீழே  உள்ள படங்களில் காணுங்கள் .

kazhukumalai kuLam  over view_minikazhukumalai kuLam_minikazhukumalai kuLam 1_mini

வெண்ணாவல் பட்டை நமது  மச்ச முனி மூலிகையக மது மேகச் சூரணத்தில் சேர்க்கப்படுகிறது.அப்பிரேகச் செந்தூரம் 1௦௦ புடமும்   30  புடமும் நமது  மச்ச முனி மூலிகையக சிறப்பு மது மேகச் சூரணத்தில்சேர்க்கப்படுகிறது .நமது வலைத் தள அன்பர்கள் இதைப்  பயன்படுத்தி இன்புறுங்கள் .

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 11) ல் தொடரலாம்.