கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளும் குணப்படுத்துதலும் பாகம் 2

This image has an empty alt attribute; its file name is sonam-on-corona-jpg-1.jpg

புலால் மறுத்தல்;-

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.

புலால் மறுத்தலையும், உயிர்க் கொலை புரியாமல் இருப்பதையும் தனது கொள்கையாகக் கொண்ட புத்த மதத்தை கொள்கையாகக் கொண்ட சீனர்கள், எங்கிருந்து இவ்வளவு புலாலை உண்ணும் பழக்கம் வந்ததோ தெரியவில்லை.விளைவு சீனர்கள் கிருமிகளின் உற்பத்திக் கூடமாகி தற்போது எலிகளில் இருந்து பரவும் ஹன்ட்டா(Hantavirus) அடுத்த வைரஸ் ஆக நம்மை மிரட்ட வருகிறது.

இதெல்லாம் இருக்கட்டும். கொரோனா மருந்துகள் பற்றி பார்ப்போம்.முதலில் உணவுகளைப் பற்றி பார்ப்போம்.உணவுகள் என்று பார்க்கும் போது முளைக்கட்டிய பயறுகள் மற்றும் தானியங்களை உணவாகக் கொண்டால், நமது வான்காந்த சக்தியை அதிகரிப்பதோடு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.நாம் முன்பு எழுதிய கட்டுரையில் நீரோட்டம் பார்க்க கவடு எனது கையில் சுற்ற நமது வான்காந்த சக்தி அதிகரிக்க முளைக்கட்டிய பாசிப்பயிறு (சிறுபயிறு) சாப்பிட்டு எமது கையில் நீரோட்டம் பார்க்கும் சக்தியை அடைந்தோம்.இதை இங்கே குறிப்பிடுவதில் பெரு மகிழ்வு எய்துகிறேன்..

இஞ்சிச் சாறு தேன் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து வெந்நீரில் காலை வெறும் வயிற்றிலசுவைத்துப் பருக பொதுவாகவே மிக நல்லது.

ஆர்சனிக் ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தை காலை வெறும் வயிற்றில் மூன்று முதல் நான்கு நாட்கள் மூன்று முதல் நான்கு உருண்டைகள் வீதம் (globules) சப்பி சாப்பிட வேண்டும்.மீண்டும் அடுத்த மாதம் ஒரு முறை இதே போல் கடைப்பிடிக்க கொரோனா தடுப்பு மருந்தாக அமையும்.இது கொரோனா வரும் முன்னர் சாப்பிட வேண்டிய மருந்தாக ஆயுஷ் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.வந்த பின்பும் தினம் காலை வெறும் வயிற்றில் மூன்று முதல் நான்கு உருண்டைகள் சுவைத்துச் சாப்பிட மிகவும் நல்ல௹ஊ.

கபசுரக் குடிநீர், வாதசுரக் குடிநீர், நில வேம்புக்குடிநீர் ஆகிய மருந்துகள் மூன்றையும் சேர்த்து தடுப்பு மருந்தாகவும், கொரோனா வந்த பிறகு நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படும்.. இவற்றில் குச்சி குச்சியாக இருக்கும்.இவற்றில் ஒவ்வொன்றிலும் சிறிய அளவு (அரை ஐஸ்க்ரீம் ஸ்பூன் அளவு)எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீராக சுருங்கும் அளவு சுட வைத்து சிறிது கருப்பட்டி சேர்த்து , தடுப்பு மருந்தாக 50மிலி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நோய் வந்த பின் மூன்று வேளையும் இந்த கஷாயத்தில் மிளகு மற்றும் ஓமம் சேர்த்து சாப்பிட மிக நன்மை செய்யும்.

மேலும் கடும் காய்ச்சல் , உடல் வலி  தலை பாரம் மூக்கு ஒழுகுதல் இவற்றுக்கு கீழ்க்கண்ட காணொளிக் காட்சியில் கண்டவாறு ஆவி பிடிக்க அனைத்து நோய்களும் , வலுத்த காற்றில் பஞ்சு போல் பறக்கும்.நாம் மழையில் நனைந்ததனால் சளியின் தாக்கம் அதிகமாகி காய்ச்சல் ஏற்பட்ட போது அதற்காக எடுத்துக் கொண்ட சாதாரண சிகிச்சை இது . இது மிகச் சக்தி வாய்ந்த பலனைத் தர வல்லது . சல்பூட்டமால்  பஃப் அடித்துக் கொண்டிருக்கும் ஆஸ்த்துமா நோயாளிகளுக்கும் இது சுகம் தர வல்லது .

ஆவி பிடித்தல்:- முதலில் ஆவி பிடித்தலுக்கு தண்ணீரை மூடிக் கொதிக்க வைக்கும் போது அதில் நொச்சி இலை , குப்பை மேனி , வேப்பிலை ,தும்பை , துளசி ,  எலுமிச்சை இலை , யூகலிப்டஸ் இலை , இவைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கும் போது  மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி , நாம் நன்றாக போர்வையால் உடல் முழுவதும் மூடிக் கொண்டு அந்தப் பானையில் கீழ்க் கண்டவாறு செங்கற்களை சூடாக்கி  அவற்றை ஒவ்வொன்றாக சீரான இடை வெளியில் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்க உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி , தலையில் உள்ள நீர்க் கோவையும் நீங்கி உடல் நலம் பெறும்.

ஜல நேத்தி:-இதன் பின் எஞ்சியிருக்கும் தலையில் கோர்த்திருக்கும் சளியையும் , நீரையும் நீக்க இந்த ஜல நேத்தி மூலம் தீர்க்கலாம்.

பிறகும் தலையில் நீரேற்றம் தெரிந்தால் நீர்க் கோவை மாத்திரையை வெந்நீரில் கெட்டியாக கரைத்து  நெற்றியிலும் பொட்டுப் பகுதியிலும் பற்றிட சிரசில் நீர்க்கோவை மறைந்து தலைவலி , மூக்கடைப்பு , மூச்சு விடாமல் சிரமம் , இரைப்பு , இருமல் , ஈசனோபிலியா , ஆஸ்துமா போன்றவை தீரும்.

சாம்பிராணிப் புகை போடுதல்:-வீட்டில் மழைக்காலங்களில் கிருமிகள் தாக்கா வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக நம் பழந்தமிழர் கையாண்ட சாம்பிராணிப் புகை போடுதல். புகை போட சிங்கப்பூர் சாம்பிராணி அல்லது சதுரகிரி மலையில் கிடைக்கும் சாம்பிராணி மரப் பிசின்  ஆகியவற்றை உபயோகிக்கலாம். இதனைப் புகை போடும் போது இத்துடன் மஞ்சள் தூள் சேர்த்துப் புகை போட குளிர்கால கிருமித் தொற்று மற்றும் நோய்களிடம் இருந்து தப்பலாம்.

இத்துடன்  பேய் மிரட்டி  ( இது பேயை மிரட்டுவதால் பேய் மிரட்டி என்றும் பேயை  விரட்டுவதால் பேய் விரட்டுவதால் பேய் விரட்டி என்றும் அழைக்கப்படுகிறது . இதை பற்றி தனி பதிவு எழுதி  இருக்கிறோம் . ) மற்றும் நில வேம்பு என்றழைக்கப்படும் பெரியா நங்கை சூரணம் (இம்ப்காப்ஸ்  தயாரிப்பில் நன்னாரி வெட்டி வேர் , விலாமிச்சை வேர் இன்னும் பல மூலிகைகள் கலந்தது )கடையில் இம்ப்காப்ஸ் தயாரிப்பில் கிடைக்கிறது . இவற்றை கலந்து புகை போட ஏவல் , பில்லி சூனியம் , பேய் பிசாசுத் தொல்லை , காரணமற்ற பயம்  போன்றவை தீயினிற் தூசாய் எரிந்து போகும் .  சித்தர்கள் பாதம் போற்றி எல்லோரும் நலமுடன் வாழ்வோம்.

இது போக தாளிசாதி சூரணம், ஏலாதிச் சூரணம்,, திரிகடுகுச் சூரணம், போன்றவற்றை நோயின் கப தீவீரம் அறிந்து கொடுக்க வேண்டும்.நோய் வெகு தீவீரமாக இருந்தால்.பவள பற்பம்(ஸ்பெஷல்), கஸ்தூரி கருப்பு அகஸ்தியர் ரசாயனத்தில் கொடுக்கலாம்.

இன்னொரு முக்கிய விஷயம்ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கபமதிகரிப்பது சுபாவம். அதேபோல் மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவம்.எனவேதான் கபத்தினை அதிகரிப்பதின் மூலமும் கபம் கெட்டுப் போவதினாலும் பரவும் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதோடு நம் எந்த அல்லோபதி மருந்துக்கும் கட்டுப்படாமல் உயிரையும் எடுக்கிறது.அதனால் இது நமது தமிழகத்தைப் பொருத்த வரை இந்த கொரோனா மே 15 ம் தேதிக்கு மேல்(கபம் கெட்டுப் போவதினால் உள்ள குற்றம் நீங்குவதால்) சக்தியிழந்து தனது செயல்பாட்டை நிறுத்திவிடும்.இது ஜோதிட கணிப்பு அல்ல,இயற்கை செயல்பாட்டின் கணிப்பு.

அது மட்டுமல்ல  சித்திரை பின்னேழும்(பின்னேழு தினங்களும்) வைகாசி முன்னேழும்(முன்னேழு தினங்களும்) அக்கினி நட்சத்திரத்தினால் சூரியன் உச்சத்திற்கு செல்வதால்(சூரியன் மகர ரேகையில் உச்சத்தில் சஞ்சரிப்பதால்) சூரியனின் சக்தியினால் பித்தக் கதிப்பு தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் எழுவதால்,அது முதல் கொரோனா தன் சக்தியிழந்து காணாமல் போய்விடும்.