இனித் தேவை இல்லை டயாலிசிஸ்(NO NEED FOR DIALYSIS)(REMEDY FOR KIDNEY FAILURE) பாகம் 1
இனித் தேவை இல்லை டயாலிசிஸ்
REMEDY FOR KIDNEY FAILURE
NO NEED FOR DIALYSIS
வெகு காலம் கழித்து ஒரு கட்டுரை அத்தியாவசியமான பதிவு .இது ஒரு மிக அற்புதமான மூலிகை
கலவை இந்த பிரச்சினையில் இருந்து மீள வைக்கிறது.இந்த மூலிகைக் கலவையில் கீழ்க் கண்ட
மருந்துகள் உள்ளன.
1)சங்கு நாராயண சஞ்சீவி
2)மேக சஞ்சீவி
3)அமிர்த சஞ்சீவி
உடலில் பாதுகாவலர்களாகக் கருதப்படும் உள்ளுறுப்புகளுள் மிக முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகம் நமது உடலில் உள்ள யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட், சல்பேட், மற்றும் கிரியாட்டினின் ஆகியவற்றோடு நீரையும் இயல்பான அளவுக்கு மேல் உடலில் தங்காமல் சிறுநீரில் வடிக்கிறது. இவற்றில் எதன்நிலை உயர்ந்தாலும் உடல் நச்சேற்றம் பெற்று, இரத்தம் கெட்டு உடலில் பல சிக்கல்கள் ஏற்படும்.
சிறுநீர் இயல்பாக வடிய வேண்டிய அளவு 800 மி.லி. முதல் 2500 மி.லி ஆகும். ஆனால் சிறுநீரகச் செயலிழப்பால் , 24 மணிகளில் 400 மி.லி. க்கு குறைந்தால், குறை சிறுநீர் ( oliguria ) என்றும் 24 மணிகளில் 100 மி. லி.க்கு குறைந்தால், சிறுநீரற்ற நிலை என்றும்(anuria) அழைக்கப்படும். சிறுநீரகத் திடீர்ச் செயலிழப்பு சிறுநீரகத்திற்கு வந்து வடிகட்டப்பட்டு செல்லும் இரத்தம் குறைவதால் ஏற்படுகிறது. இதனை சிறுநீரக முற்பகுதிச் செயலிழப்பு என்றும் இரு சிறுநீரகத்திலிருந்தும் வடிந்த சிறுநீர் வெளிப்படாமல் ஏற்படும் சிறு நீர்ப்பாதை அடைப்பு, சதை அடைப்பால் விளையும். சிறுநீரக பிற்பகுதிச் செயலிழப்பு என்றும் அழைக்கின்றோம்.
சிறுநீரகச் செயலிழப்பில் சிறுநீரகத்திற்கு வந்து வடிகட்டப்பட்டு செல்லும் இரத்தம் குறைவதால் சிறுநீர் வடிவது குறையும். சிறுநீரக இரத்தம் ஓட்டம் குறைந்து இரத்த உப்பு குறைவதால் ரீனின் என்ற இயக்குநீர் சுரக்கப் பட்டு, இரத்த குழாய் ஒடுக்கிகள் வெளியிடப்படும், இதனால் இரத்த அழுத்தம் உயரும். மேலும் ஆல்டோஸ்டீரான் வெளியிடப்பட்டு, சிறுநீரிலுள்ள உப்பும், நீரும், மீண்டும் உறிஞ்சப்படுவதால் சிறுநீரின் அடர்வு மிகைத்து சிறுநீர்குழாயில் வடியும் பொழுது எரிச்சல் மற்றும் திசுசிதைவை விளைவிக்கிறது.
நோய்க்கூறு:- சிறுநீரகம் சுருங்ம் ,சிறிது நீர்க்கட்டு ஏற்படும்,நெப்ரான் எனப்படும் நுண் சுரப்புக் குழாய்களில் நச்சேறி, சிறுநீரக புரணியில் திசுக்கள் மரிக்கும். சிறுநீரக வடிகட்டிகள் அடைபடும்.
சிறுநீரக செயலிளப்புக்கு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களால் வழங்கப்படும் மருந்துகள் கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.